திருப்பதி: ஆந்திராவில் திருடப்போன இடத்தில் சன்னலில் திருடன் சிக்கிக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதே போன்று இவ்வாண்டும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.
இதையறிந்து செவ்வாய் இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோயில் சன்னல் கம்பிகளை நீக்கி உள்ளே புகுந்துள்ளான்.
கருவறையில் இருந்த அம்மன் தங்க வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு சன்னல் வழியாக வெளியேற அவன் முயற்சி செய்துள்ளான்.
ஆனால் அவரால் வெளியே வர முடியாமல் சன்னல் துவாரத்தில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் போராடி களைப்பில் அவர் அப்படியே தூங்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள், சன்னல் துவாரத்தில் சிக்கியிருந்த திருடனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் திருடனை மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திருடனை மீட்டு காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

