தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
975cb5d9-e9ef-45a4-966e-35440c1193b5
-

பெங்­க­ளூரு: மின்­னஞ்­சல் வழி விடுக்­கப்­பட்ட வெடி­குண்டு மிரட்­டல் கார­ண­மாக பெங்­க­ளூ­ரில் உள்ள ஏழு பள்­ளி­களில் நேற்று காலை பதற்­றம் நில­வி­யது.

இதை­ய­டுத்து, அனைத்து மாண­வர்­களும் பள்­ளி­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டு, தீவிர சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஏழு பள்­ளி­க­ளுக்­கும் நேற்று காலை சுமார் 11 மணி­ அள­வில் வெடி­குண்டு மிரட்­டலு­டன் கூடிய மின்­னஞ்­சல் ஒன்று வந்­தது.

"இந்த மிரட்­டல் வெறும் நகைச்­சுவை அல்ல. உட­ன­டி­யாக காவல்­து­றையை அழைக்­க­வும். இல்­லை­யெ­னில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­ப­டு­வர்," என்று அந்த மின்­னஞ்­ச­லில் மிரட்­டல் வரி­கள் காணப்­பட்­டன. தக­வல் அறிந்து வந்த காவல்­து­றை­யி­ன­ரும் வெடி­குண்டு செய­ல் இ­ழப்பு நிபு­ணர்­களும் அப்­பள்ளி­களில் தீவிர சோத­னை­ நடத்தினர். எனி­னும், வெடி­குண்டு எதுவும் சிக்­க­வில்லை.