உக்ரேன் போர்: சமையல் எண்ணெய் விலை உயர்வு

உக்ரேன் போர்: சமையல் எண்ணெய் விலை உயர்வு

1 mins read
cb50a757-1eb5-45ad-885f-6245857ff140
-

புது­டெல்லி: உக்­ரேன், ரஷ்யா மோதல் கார­ண­மாக நாடு முழு­வ­தும் சமை­யல் எண்­ணெய் விலை இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் சமை­ய­லுக்கு சூரி­ய­காந்தி எண்­ணெய் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

உக்­ரே­னில் இருந்­தே பெரும் அள­வில் சூரி­ய­காந்தி எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், போர் மூண்ட பிறகு எண்­ணெய் இறக்­கு­மதி கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டு உள்ளது.

இத­னால் முன்பு நூறு ரூபா­யாக இருந்த ஒரு லிட்­டர் சூரி­ய­காந்தி எண்­ணெய் இப்­போது இரு மடங்­காகி 200 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

உக்­ரேன் மீது ரஷ்ய படை­கள் தாக்­கு­த­லைத் தொடங்கி 40 நாள்­க­ளுக்கு மேலா­கி­விட்­டன. ஒரு­வேளை போர் முடி­வுக்கு வந்­தா­லும்­கூட, மீண்­டும் எண்­ணெய் உற்­பத்தி தொடங்கி உக்­ரே­னின் ஏற்­று­மதி அளவு பழைய நிலைக்­குத் திரும்ப சில மாதங்­கள் ஆகக்­கூ­டும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் நல்­லெண்­ணெய், கடலை எண்­ணெய், தேங்­காய் எண்­ணெய் ஆகி­ய­வற்­றின் விலை­யும் கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், டெல்லி, மாஸ்கோ இடை­யே­யான விமா­னச் சேவை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஏர் இந்­தியா நிறு­வ­னம் தெரி­வித்­து இருக்கிறது.

ரஷ்­யா­வுக்­குச் செல்­லும் விமா­னங்­க­ளின் காப்­பீட்­டுக் கட்­ட­ணம் கடு­மை­யாக உயர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தால் டெல்லி, மாஸ்கோ வழித்­த­டத்­தில் வாரந்­தோ­றும் இரு­முறை இயக்­கப்­பட்ட விமா­னச்­ சே­வை­கள் ரத்­தா­ன­தா­கத் தெரி­கிறது.