இந்தி திணிப்பு ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி: பினராய்

இந்தி திணிப்பு ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி: பினராய்

2 mins read
7e659e8d-305b-4060-b2a6-036448ec4870
-

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்தி திணிப்பு, தேசிய ஒரு­மைப்­பாட்டை சிதைக்­கும் முயற்சி என்று கூறி­யுள்­ளார் கேரள முதல்­வர் பின­ராய் விஜ­யன்.

கேரள மாநி­லம் கண்­ணூ­ரில் மார்க்­சிஸ்டு கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் மத்­திய குழுக் கூட்­டம் ஏப்­ரல் 4ஆம் தேதி முதல் நேற்று வரை நடை­பெற்­றது.

இந்த மாநாட்­டில் பேசிய கேரள முத­ல­மைச்­சர் பின­ராய் விஜ­யன், "மத்­திய அர­சின் இந்­தித் திணிப்பை ஒரு­போ­தும் அனு­ம­திக்க முடி­யாது.

"இந்தி திணிப்பு என்­பது தேசிய ஒரு­மைப்­பாட்­டை­யும் ஒற்­று­மை­யை­யும் சிதைக்­கும் முயற்சி," என்­றார்.

தமிழக முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் எதிர்­பார்ப்பு மிக்க தலைவராக திகழ்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த மாநாட்­டில், தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று முன்­தி­னம் பங்­கேற்று பேசி­னார். அப்­போது அவர் மலை­யா­ளத்­தில் தொடங்கி தமி­ழில் பேசி ஆங்­கி­லத்­தில் தனது உரையை நிறைவு செய்­தார்.

இந்த மாநாட்­டில் பங்­கேற்க மார்க்­சிஸ்டு கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் தேசிய பொது செய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூ­ரி­யும் கண்­ணூர் சென்றிருந்­தார்.

"மத்­தி­யில் ஆளும் பார­திய ஜன­தாவை எதிர்க்க வலு­வான கூட்­டணி அமைக்க வேண்­டி­யது அவ­சி­யம். இதற்­கான நட­வ­டிக்­கை­கள் மாநில அள­வில் தொடங்­கப்­பட வேண்­டும்.

"அந்த வகை­யில் தமி­ழ­கத்­தில் தற்­போது ஒத்த கருத்­து­டைய திமுக, காங்­கி­ரஸ் கட்­சி­களு­டன் மார்க்­சிஸ்டு கம்­யூ­னிஸ்டு கூட்­டணி அமைத்­துள்­ளது," என்று பேசினார் யெச்சூரி.

இதற்­கி­டையே, பள்­ளி­களில் இந்திக் கட்­டா­யம் என்ற மத்­திய அர­சின் அறி­விப்­புக்கு வட­கி­ழக்கு மாநில மாண­வர் அமைப்­பு­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.

இதுதொடர்­பாக பேசிய இந்த அமைப்­பின் தலை­வர் சாமு­வேல் பி ஜிர்வா, "இந்­தித் திணிப்பை நாங்­கள் எதிர்க்­கி­றோம்.

"விரும்­பு­பவர்­கள் தேர்வு செய்து கொள்­ளும் மொழி­யாக இந்தி இருக்­கட்­டும். இந்­தியைக் கட்­டா­யம் ஆக்­கக் கூடாது," என்றார்.