பிரான்ஸ் அதிபர் தேர்தல்; இந்தியாவில் வாக்களிப்பு

பிரான்ஸ் அதிபர் தேர்தல்; இந்தியாவில் வாக்களிப்பு

1 mins read
72143efd-e71b-4471-b0bd-4dde36973099
பிரெஞ்சு குடி­மக்­கள் தங்­க­ளது குடி­யு­ரிமை அடை­யாள அட்டையைக் காண்­பித்து வாக்களித்தனர். பிரெஞ்சு குடியுரிமையுள்ள பெண் ஒருவர் புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வாக்களித்தார். படம்: ஏஎஃப்பி -

புதுச்சேரி: புதுச்­சே­ரி­யில் வசிக்கும் பிரெஞ்­சுக் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­கள், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நேற்று வாக்களித்தனர்.

இரு கட்­டங்­க­ளாக நடை­பெறும் பிரான்ஸ் அதி­பர் தேர்­த­லில், அந்­நாட்­டின் தற்­போ­தைய அதி­பர் இமா­னு­வேல் மேக்­ரான் உட்­பட 12 பேர் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

இத்தேர்­த­லுக்­கான முதற்­கட்ட வாக்­குப்­ப­திவு நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்­நாடு, புதுச்­சேரி, கேரளா­வில் வசிக்­கும் ‌ஏறத்தாழ 4,564 பிரெஞ்சு குடி­மக்­கள் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ள­னர்.

புதுச்­சேரி பிரெஞ்சு துணை தூத­ர­கத்­தில் உள்ள வாக்­குச்­சாவடி­யி­லும் காரைக்­கா­லின் அலாயன்ஸ் பிரெஞ்­சில் உள்ள வாக்­குச்­சா­வடி­யி­லும் இந்த மக்­கள் வாக்­க­ளிக்க பிரெஞ்சு தூத­ர­கம் ஏற்­பாடு செய்துள்­ளது.