கிருமிப் பரவல் முடிந்து விடவில்லை: மோடி

கிருமிப் பரவல் முடிந்து விடவில்லை: மோடி

1 mins read
d8603002-d450-437f-be6f-6f5ef2bd0bf6
-

அக­ம­தா­பாத்: கொரோனா பெருந்­தொற்று நம்மை விட்டு நீங்­க­வில்லை என தெரி­வித்த இந்­தி­யப் பிர­த­மர் மோடி, அவை வெவ்­வேறு திரி­பு­க­ளாக மீண்­டும் பர­வு­வ­தால் பொது­மக்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைக் குறைத்­துக் கொள்ள வேண்­டாம் என அறி­வுறுத்­தி­யுள்­ளார்.

ராம நவமி கொண்­டாட்­டத்­தை­யொட்டி, குஜ­ராத் மாநி­லம் கதி­லா­வில் அமைந்­தி­ருக்­கும் உமியா மாதா கோவில் நிறு­வன தின விழா­வில் காணொளி மூலம் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர் இவ்­வாறு சொன்­னார்.

"கொரோனா பெருந்­தொற்று ஒரு நெருக்­கடி என்­றும் அந்த நெருக்­க­டி­யான சூழல் இன்­னும் முடி­வ­டைந்­து­வி­ட­வில்லை.

"தற்­போ­தைய நிலை­யில் கிரு­மிப் பர­வல் குறைந்­துள்­ள­து­போல் தோன்­றி­னா­லும் அவை எப்­போது மீண்­டும் பர­வும் என தெரி­யாது," என்­றும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

எனவே, மக்­கள் அனை­வ­ரும் விழிப்­பு­ணர்­வு­டன் செயல்­பட்டு நோய்த் தடுப்பு வழி­காட்­டு­தல்­களைப் பின்­பற்ற வேண்­டும் என்­றும் அவர் கேட்டுக்கொண்டார்.