புதுடெல்லி: காங்கிரஸ் கூட்டணியில், மாயாவதியை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் 'தி தலித் ட்ரூத்' என்ற புத்தகத்தை வெளியிட்டு அவா், "இன்றைக்கு அரசியல் தலைவா்களைக் கட்டுப்படுத்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுவதால் அரசியலமைப்புச் சட்டம் அதன் அா்த்தத்தை இழந்துவிட்டது.
"உத்தரப் பிரதேச சட்டமன்றத் தோ்தலின்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராகுமாறு மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா்.
"சிபிஐ, அமலாக்கத் துறை, பெகாஸஸ் மென்பொருள் ஆகியவற்றின் நெருக்கடிக்கு அஞ்சி, பாஜக ஆட்சியமைக்கத் தெளிவான பாதையை மாயாவதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாா்," என்றார். இன்றைக்கு அரசியல் முறையை சிபிஐயும் அமலாக்கத் துறையும் கட்டுப்படுத்துகின்றன என்றும் அவர் சொன்னார்.

