செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
4c0dfae8-25c7-4cb3-80ed-720d73ed8ad9
-

நீரவ் மோடி கூட்­டாளி சுபாஷ் சங்­கர்

எகிப்து நாட்­டில் கைது

மும்பை: ஆயி­ரத்து 578 கோடி ரூபாய் கடன் மோசடி புகா­ரில் சிக்கி, லண்­ட­னுக்­குத் தப்பி ஓடிய நீரவ் மோடி­யின் நண்­பர் சுபாஷ் சங்­கர் என்­ப­வர் எகிப்து நாட்­டில் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார். நீரவ் மோடி­யின் பெரும்­பா­லான பண பரி­வர்த்­த­னை­களை சுபாஷ்­ சங்­கர்­தான் செய்­த­தாகத் தெரி­கிறது. இது தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்­காக சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் அவரை மும்பை அழைத்து வந்­துள்­ள­னர்.

நீரவ் மோடி வழக்­கில் சுபாஷ் ­சங்­கர் கைதா­னது மிக பெரிய வெற்­றி­யாக கரு­தப்­ப­டு­கிறது. மும்பை அழைத்து வரப்­பட்­டுள்ள சுபாஷ் சங்­கர் சி.பி.ஐ. நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் காவ­லில் எடுத்து விசா­ரணை நடத்­து­வார்­கள். இதன் மூலம் பல முக்­கி­யத் தக­வல்­கள் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நீரவ் மோடி நடத்­திய வைர வர்த்­தக நிறு­வ­னத்­தின் பொது மேலா­ள­ராக சுபாஷ் சங்­கர் பணி­யாற்­றி­ய­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

பாஜக ஆட்சி மன்­றக் குழு

உறுப்­பி­ன­ரா­கி­றார் ஆதித்­ய­நாத்

புது­டெல்லி: உத்­தரப் பிர­தேச சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 2-வது முறை வெற்றி பெற்­ற­தற்கு பிறகு முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், பாஜக ஆட்சி மன்­றக் குழு உறுப்­பி­ன­ராக உள்­ளார். இதன் மூலம் 2024 மக்­க­ள­வைத் தேர்­த­லில் பிர­த­மர் வேட்­பா­ள­ராக அவர் அறி­விக்­கப்­ப­டு­வார் என்று கூறப்­ப­டு­கிறது. மத்­தி­யில் ஆளும் பாஜக கட்சி ஆட்சி மன்­றக் குழு­வில் இரண்டு உறுப்­பி­னர்­கள் பத­வி­கள் காலி­யாக உள்­ளன. மத்­திய அமைச்­சர்­கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வ­ராஜ் மறைந்த பிறகு அந்த இடங்­கள் நிரப்­பப்­ப­ட­வில்லை. அதன் கார­ண­மாக ஆதித்­ய­நாத் பாஜக ஆட்சி மன்­றக் குழு­வி­ன­ராக ஆக்­கப்­ப­டு­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

உ.பி.யில் இரண்­டா­வது முறை தேர்­த­லில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஆதித்­ய­நாத், துற­வி­யா­க­வும் உள்­ளார். அவர் இந்­துத்­துவா கொள்­கையை உறு­தி­யாக கடை­ப்பி­டிப்­பார் என்று பாஜக.வின் தாய் அமைப்­பான ராஷ்­டி­ரிய ஸ்வ­யம் சேவக்­கி­ன­ரும் கருதுவதாகக் கூறப்­ப­டு­கிறது.

மராட்­டிய அரசை சீர்­கு­லைக்­கும்

பாஜ­க­வின் முயற்சி முறி­ய­டிக்­கப்படும்

மும்பை: மத்­திய அமைப்­பு­களை தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூல­மும், மாநி­லங்­க­ளுக்கு இடையே சர்ச்­சை­களை உருவாக்கு­வ­தன் மூல­மும், தலை­வர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணையை நடத்­து­வது மூல­மும், பார­திய ஜனதா கட்­சி­யின் கட்­டுப்­பாட்டில் இல்­லாத மாநி­லங்­க­ளைச் சீர்­கு­லைக்க அக்­கட்சி முயற்சி செய்து வரு­கிறது. வேலை­யில்­லாத் திண்­டாட்­டத்தை அதி­க­ரித்து மக்­க­ளின் கவ­னத்தை வேறு பிரச்­சி­னை­களில் திசை திருப்­பு­கிறது பாஜக அரசு என்று சாடி­யுள்­ளார் சரத்­ப­வார். அத்­து­டன் மகா­ராஷ்­டி­ரா­வில் மகா விகாஸ் அகாடி அரசை சீர்­கு­லைக்க பாஜக முயற்சி செய்து வரு­கிறது. இவை­ அனைத்­தை­யும் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் முறி­ய­டிக்­கும் என்று சரத்­ப­வார் பேசி­யுள்­ளார்.

தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வார் நேற்று முன்­தி­னம் அம­ரா­வ­தி­யில் நடந்த கட்­சிப் பொதுக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்போது இவ்­வாறு தெரி­வித்­தார்.

பெங்­க­ளூ­ரு­வில் மேலும் மூன்று

பள்­ளிகளுக்கு வெடி­குண்டு மிரட்­டல்

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் பெங்­க­ளூ­ரு­வி­லும் அதன் புற­ந­க­ரி­லும் உள்ள 15 பள்­ளி­க­ளுக்கு கடந்த வாரம் சிலர் வெடி­குண்டு மிரட்­டல் விடுத்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் மேலும் மூன்று பள்­ளி­க­ளுக்கு வெடி­குண்டு மிரட்டல் வந்­தி­ருப்­ப­தாக அப்­பள்­ளி­கள் காவல்­து­றை­யில் புகார் தெரி­வித்­துள்­ளன.

இது­கு­றித்து காவல்­துறை நடத்­திய விசாரணை­யில், பல்­வேறு முக­வ­ரி­களில் இருந்து பள்ளிகளுக்கு மின்­னஞ்­சல் அனுப்பி மிரட்டி இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.