அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் புஜ்பால்

அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் புஜ்பால்

1 mins read
6258b940-d44c-4147-b36a-dc72add3ad27
-

அவு­ரங்­கா­பாத்: அம­லாக்­கத்­து­றை­யின் கொடூர சட்­டப்­பி­ரி­வு­கள் ரத்து செய்­யப்­பட வேண்­டும் என்று அமைச்சர் சகன்­ புஜ்­பால் பேசி­னார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஆளும் கட்சித் தலை­வர்­கள் அம­லாக்­கத்­து­றை­யின் நட­வ­டிக்­கைக்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக அம­லாக்­கத்­துறை வழக்­கில் அமைச்­சர் பத­வியை இழந்த அனில் தேஷ்­முக், கைதாகி பல மாதங்­க­ளாக சிறை­யில் உள்­ளார். அவ­ருக்கு பிணை கிடைக்­க­வில்லை.

இந்த நிலை­யில் அவு­ரங்­கா­பாத்­தில் சமூக சீர்­தி­ருத்­த­வாதி மகாத்மா புலே பிறந்­த­நாள் விழா­வில் அமைச்­சர் சகன் புஜ்­பால் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார். அப்­போது அவர், "அம­லாக்­கத்­து­றை­யின் கீழ் கொடூ­ர­மான சட்­டப்­பி­ரி­வு­கள் உள்­ளன. இந்த சட்­டப்­பி­ரி­வு­க­ளின் கீழ் கைது செய்­யப்­ப­டு­பவர்­க­ளுக்கு எளி­தில் பிணை கிடைப்­ப­தில்லை.

அமைச்­சர்­கள், மக்­கள் பிர­தி­நிதி­கள் மீது வேண்­டு­மென்றே இந்த கொடூ­ர­மான சட்­டப்­பி­ரி­வு­க­ளின் கீழ் வழக்­கு­கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

பாஜகவின் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யாக அவர்­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

எனவே கொடூர சட்­டப்­பி­ரி­வு­களை நீக்கவேண்­டும். இது தொடர்­பாக அனைத்­துக் கட்­சி­களும் ஒரு­மித்த கருத்­துக்கு வர வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

அமைச்­சர் சகன் புஜ்­பால் ஊழல் வழக்­கில் சிக்கி நீண்ட காலம் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.