தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் ஜெட் ஏர்வேஸ்

1 mins read
9aee8154-26df-4c76-b023-eea395bca347
-

புது­டெல்லி: இவ்­வாண்டு அக்­டோ­ப­ரில் ஜெட் ஏர்­வேஸ் மீண்­டும் செயல்­ப­டத்­தொ­டங்­கும் என்று அந்த நிறு­வ­னத்­தின் புதிய தலை­மைச் செயல் அதி­காரி சஞ்­சீவ் கபூர் தெரி­வித்­துள்­ளார்.

இம்­மாத இறு­திக்­குள் விமான நிறு­வ­னம் செயல்­ப­டு­வ­தற்­குத் தேவை­யான அனு­மதி கிடைத்­து­வி­டும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கடந்த வாரம்­தான் நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­காரி பொறுப்பை சஞ்­சீவ் கபூர் ஏற்­றார். தற்­போது நிறு­வ­னத்­தில் 200 ஊழி­யர்­கள் உள்­ள­னர். இதில் மூன்­றில் இரு பங்கு ஊழி­யர்­கள் ஏற்­கெ­னவே ஜெட் ஏர்­வே­ஸில் பணி­யாற்­றி­ய­வர்­கள்.

கடன் பிரச்­சினை கார­ண­மாக ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னம் 2019ஆம் ஆண்­டில் மூடப்­பட்­டது.

இதை­ய­டுத்து என்.சி.எல்.டி. வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­க­ளான ஜலான் மற்­றும் லண்­ட­னைச் சேர்ந்த கல்­ராக் கேபி­டல் ஆகிய நிறு­வ­னங்­க­ளி­டம் அந்­நி­று­வ­னம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக தமி­ழக ஊட­க­மான புதிய தலை­முறை தெரி­வித்­தது. இந்­தக் குழு­மம் 1,350 கோடி ரூபாயை முத­லீடு செய்ய ஒப்­புக்­கொண்­டது. இதில் சுமார் ரூ.450 கோடி வரை பழைய கடன்­க­ளுக்­குச் செல்­லும். எஞ்­சிய தொகை நிறு­வ­னத்தை மீண்­டும் நடத்­து­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்­கன் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­மைச்­செ­யல் அதி­கா­ரி­யான விபுலா குண­தி­லகா, ஜெட் ஏர்­வே­ஸின் தலைமை நிதி அதி­காரி யாகப் பொறுப்பு ஏற்­றார்.