புதுடெல்லி: இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை ஓட்ட 90 விமானிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய விமானத்தை ஓட்டு வதற்காக அளிக்கப்படும் பாவனைப் பயிற்சி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் (டிஜிசிஏ) தெரிவித்தது.
விமானிகள் அனைவரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
பாவனைப் பயிற்சியில் சில குறைபாடுகள் இருந்தது வழக்கமான சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டு இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிஜிசிஏ எனும் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விமானக் கட்டுப்பாட்டு முறையில் கோளாறு இருந்ததையும் இந்திய ஆணையம் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதனால் பாதிப்பு இல்லை என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியது.
தங்களிடம் போதிய விமானிகள் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அந்நிறு வனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"ஸ்பைஸ் ஜெட்டின் 90 விமானி கள் மட்டும் மேக்ஸ் விமானங்களை ஓட்ட டிஜிசிஏ தடை விதித்துள்ளது. அந்த 90 விமானிகளுக்குப் மீண்டும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது," என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
"இந்தத் தடை உத்தரவு மேக்ஸ் விமானத்தின் செயல்பாடுகளை பாதிக்காது. ஸ்பைஸ் ஜெட் 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. "இந்த விமானங்களை இயக்குவதற்கு சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர்.
"மேக்ஸில் பயிற்சி பெற்ற 650 விமானிகளில் 560 பேர் தொடர்ந்து பணியில் உள்ளனர்.
"இது தற்போதைய தேவையைவிட அதிகம்," என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்து உள்ளார்.

