ெபங்களூரு: கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அமைச்சர் ஈஷ்வரப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்கொலைக்குத் தூண்டியதாக இரு பிரிவு களில் அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.
அவரது உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெல்காம் மாவட்டம் இன்டல்கா பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல், அமைச்சர் ஈஷ் வரப்பா தன்னிடம் 40 விழுக்காடு படித்தொகை கேட்பதாக புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணை யில் தெரிய வருகிறது. அது மட்டு மல்லாமல் தனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஷ்வரப்பாதான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷ் தற்கொலை தொடர்பாக அமைச்சர் ஈஷ்வரப்பா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் ஈஸ்வரப்பாவின் பதவி பறிபோகலாம் என கூறப்படுகிறது.
அவரே பதவியிலிருந்து எந்த நேரத்திலும் விலகலாம் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேச தன்னைச் சந்திக்க வருமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

