தினகரன்: நான் எந்த தவறும் செய்யவில்லை

தினகரன்: நான் எந்த தவறும் செய்யவில்லை

1 mins read
467e6da0-29ac-4c67-aed4-9bae87f16a24
-

புது­டெல்லி: சசி­கலா தலைமை யிலான அணிக்கு இரட்டை இலை சின்­னத்தை பெற தேர்­தல் ஆணை­யத்­துக்கு ரூபாய் 50 லஞ்­சம் வழங்க முயற்சி செய்­த­தா­கக் கூறப்­படும் வழக்­கில் டி.டி.வி. தின­க­ர­னி­டம் மீண்­டும் விசா­ரணை நடந்­துள்­ளது.

செவ்­வாய்க் கிழமை காலை 11 மணிக்கு டெல்லி ஜன்­பத் சாலை­யில் உள்ள அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கத்­தில் அவர் முன்­னி­லை­யாகி அதி­கா­ரி­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார். பின்னர் செய்­தி­யாளர்க­ளி­டம் பேசிய தின­க­ரன், "சுகேஷ் சந்­திரேகர் ஒவ்­வொரு முறை­யும் ஒவ்­வொரு மாதிரி வாக்கு ­மூ­லம் அளித்து வரு­கி­றார். என்னை சிக்க வைப்­ப­தற்­காக அவர் மாற்றி மாற்றி சொல்­கி­றார் என நினைக்­கி­றேன். நான் எந்தத் தவறும் செய்­ய­வில்லை," என்றார்.