புதுச்சேரி: எழுத்தாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணன் 2019ஆம் ஆண்டு வரைந்த தமிழணங்கு ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த ஓவியத்தை புதுச்
சேரியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்னும் மாணவர், இலை, மூங்கில் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
புதுச்சேரி பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் முத்தமிழ் செல்வனின் திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் துணைநிலை ஆளுநர் தமிழிசையும் முத்தமிழ்செல்வனைப் புகழ்ந்தனர். மேலும் அந்த மாணவருக்குப் பாராட்டுக் கிண்ணம் ஒன்றை முதல்வர் ரங்கசாமி பரிசாக அளித்தார்.
மாணவரின் தமிழணங்கு சிற்பம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஓவியர் சந்தோஷ் நாராய ணன் புதுமையான ஓவியங்களை வரையக் கூடியவர்.
அவர் வரைந்த ஓவியத்தில் திரிந்த சடை, கயல் விழி
களுடன் வெள்ளைநிற சேலையில் ழகர வேலை ஏந்தி கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறார் தமிழ்த்தாய்.
அண்மையில் வெளியான 'ரைட்டர்' என்னும் தமிழ்த் திரைப்படத்தின் விளம்பரத் தையும் வித்தியாசமான முறையில் வரைந்திருந்தார் சந்தோஷ் நாராயணன்.

