செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
20241e70-a215-4993-aa2c-2e9a3612be30
-

கோவில் திருவிழாவுக்காக

விமான ஓடுபாதை மூடல்

திரு­வ­னந்­த­பு­ரம்: பங்­குனி திரு­வி­ழா­வின் ஒரு பகு­தி­யாக நடத்தப்படும் ஸ்ரீ பத்­ம­நா­ப­சு­வாமி கோவி­லின் ஆராட்டு ஊர்­வ­லத்தை முன்­னிட்டு கேர­ளா­வில் உள்ள திரு­வ­னந்­த­பு­ரம் அனைத்துலக விமான நிலை­ய ஓடுபாதை இன்று (ஏப்­ரல் 15) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து விமான நிலை­யம் வெளி­யிட்­டுள்ள செய்திக்குறிப்­பில், உள்­நாட்டு மற்­றும் அனைத்துலக விமானச் சேவை­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் திருவிழாக் கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, விமானப் பய­ணி­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான பரி­சு­க­ளு­டன் பல்­வேறு போட்­டி­களும்

ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த செய்­திக்­

கு­றிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

அம்பேத்கர் 132வது பிறந்த நாள்

புதுடெல்லி: சமூக சீர்திருத்தவாதி என்று போற்றப்படும்

பி.ஆர்.அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் நேற்று நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பரோலில் சென்று 33 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

புது­டெல்லி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் ஹத்­ராஸ் மாவட்­டத்­தில் 1986 ஆம் ஆண்டு ரகு­நந்­தன் சிங் என்­ப­வர் பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் கைது செய்­யப்­பட்­டார். இந்த வழக்­கில் அவ­ரின் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு நீதி­மன்­றத்­தால் அவ­ருக்கு ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. பின்­னர், 1989ஆம் ஆண்டு அல­கா­பாத் உயர் நீதி­மன்­றத்­தில் ரகு­நந்­தன் சிங் மேல்­மு­றை­யீடு செய்­தார். அதைத் தொடர்ந்து அவர் பரோ­லில் விடு­விக்­கப்­பட்­டார். பின்­னர் அவர் மாய­மா­னார். காவல்­துறை அவரை தீவி­ர­மா­கத் தேடி வந்­தது. ஒரு கட்­டத்­தில் ரகு­நந்­தன் இறந்­து­விட்­ட­தாக அவ­ரது கிரா­மத்­தி­ன­ரும் காவல்­து­றை­யி­ன­ரும் கரு­தி­னர். இந்த நிலை­யில் 33 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு டெல்­லி­யில் அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

வயநாடு: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கரும்பன்மூலாப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீஸ். இவரின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்றார். திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது மீனங்காடி, காக்கவயல் பகுதியில் டேங்கர் லாரி ஒன்று காரில் மோதியது. அதில், காரில் இருந்த பிரவீஸ், 39, அவர் மனைவி ஸ்ரீஜிஷா, 34, தாய் பிரேமலதா, 62, ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட பிரவீஸின் 5 வயது மகனை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மோடியின் புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி யில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். குறிப்பாக, எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். வரும் புத்தாண்டு வெற்றியையும் மகிழ்வையும் தரட்டும். எல்லா லட்சியங்களும் நிறைவேறட்டும்," என்று தெரிவித்துள்ளார்.

4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த செய்னாபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையி னருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.