ஆந்திரா, கேரளாவில் பேருந்து, டாக்சி கட்டணங்கள் உயர்வு

ஆந்திரா, கேரளாவில் பேருந்து, டாக்சி கட்டணங்கள் உயர்வு

2 mins read
a5b98ce8-08ce-4926-ae21-2dd916df5130
-

எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் பேரிழப்பைச் சமாளிக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் முயற்சி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. கேரளாவில் மே மாதம் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

பெட்­ரோல், டீசல் போன்ற எரி­பொ­ருள்­க­ளின் விலை நாடு முழு­வ­தும் விலை அதி­க­ரித்­துள்­ளது. பேருந்­து­கள் பயன்­ப­டுத்­தும் டீசல் ஒரு லிட்­டர் விலை 100 ருபா­யைத் தாண்டிவிட்­டது. இத­னால் அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­கள் பெரும் இழப்பை சந்­தித்து வரு­கின்­றன.

இழப்பை ஈடு­கட்ட பேருந்து பய­ணச்­சீட்­டுக் கட்­ட­ணங்­களை உயர்த்த பல்­வேறு மாநில அர­சு­கள் திட்­ட­மிட்­டுள்­ளன. கேர­ளா­வில் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­திற்கு ஏற்­பட்ட இழப்பு கார­ண­மாக தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கு­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டது.

ஆந்­திரா மாநி­லத்­தி­லும் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் பெரும் இழப்பை சந்­தித்து வந்­தது. இதை­ய­டுத்து அங்கு பேருந்­துக் கட்­ட­ணங்­களை உயர்த்த அரசு முடிவு செய்­தது. அந்த கட்­டண உயர்வு நேற்று (ஏப்­ரல் 14) முதல் நடப்­புக்கு வந்­தது.

கிரா­மப்­பு­றங்­கள் மற்­றும் மாந­கர பகு­தி­களில் இயக்­கப்­படும் அரசு நக­ரப் பேருந்­து­களில் தொடக்­கக் கட்­ட­ணம் ரூ.10 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து கிலோ­மீட்­ட­ருக்கு ஏற்­ற­வ­கை­யில் கட்­ட­ணம் அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. சொகு­சுப் பேருந்­தில் 5 ரூபா­யும் சூப்­பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்­து­களில் வழக்­க­மான கட்­ட­ணத்­தை­விட 10 ரூபா­யும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்டு டீசல் விலை ஆந்­தி­ரா­வில் ரூ. 60 ஆக இருந்­தது. தற்­போது ரூ.100 ஆக உயர்ந்­துள்­ளது. இதன் கார­ண­மாக பேருந்­துப் பய­ணக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டுள்­ள­தாக ஆந்­திர மாநில போக்­கு­வ­ரத்து நிர்­வாக இயக்­கு­நர் துவா­ரக திரு­ம­லை­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

பேருந்­துக் கட்­டண உயர்­வைத் தொடர்ந்து ஆந்­தி­ரா­வில் டாக்சி, ஆட்டோ கட்­ட­ணங்­களும் நேற்று உயர்ந்­தன. கேர­ளா­வில் மே 1ஆம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ பய­ணக் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­படும் என்று அம்­மா­நில போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆண்­டனி ராஜ் கூறி­யுள்­ளார்.