ராட்சத பல்லிக்கு பாலியல் கொடுமை; 4 வேட்டைக்காரர்கள் கைது

1 mins read
6dad4c55-14fd-4504-828d-61e4d2b182fe
'மானிட்டர் லிஸார்ட்' எனப்படும் ராட்சத பல்லி. கோப்புப் படம் -

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் 'மானிட்­டர் லிஸார்ட்' எனப்­படும் ராட்­சத பல்­லியை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக நால்­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர்.

மகா­ராஷ்­டி­ரா­விலுள்ள கோதேன் கிரா­மம் அருகே சஹி­தாரி புலி­கள் காப்பகம் உள்­ளது. இந்­தப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் சந்­தே­கத்­துக்கு இட­மான வகை­யில் நான்கு பேர் சுற்றித் திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் வனத் துறையினர் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களி டம் வனத்­து­றை­ அதிகாரிகள் விசா­ரணை நடத்­தி­னர். அவர்­கள் அனை­ வ­ரும் பக்­கத்­துக் கிரா­மத்­தைச் சேர்ந்த வேட்­டைக்­கா­ரர்­கள் என்­பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. சில வாரங்­க­ளுக்கு முன்­னர் இதே பகு­தி­யில், வங்­காள ராட்­சத பல்லி ஒன்றை இவர்­கள் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தது அவர்­க­ளின் கைபேசி காணொ­ளி­யில் பதி­வாகி இருந்­தது.

விசா­ர­ணை­யின் ஒரு பகு­தி­யாக கைபே­சியை அதி­கா­ரி­கள் சோதித்­த­போது இந்த அதிர்ச்சி சம்­ப­வம் தெரிய வந்­தது. உட­ன­டி­யாக நான்கு பேரை­யும் வனத்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

சந்­தீப் துக்­ராம், பவார் மங்­கேஷ், ஜனார்­தன் காம்­டே­கர் மற்­றும் அக்­சய் சுனில் ஆகி­யோர் அந்த நால்­வர் என்றும் நீதி­மன்­றத்­தில் அவர்கள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்றும் அதிகாரிகள் கூறினர். வன உயி­ரி­னங்­கள் பாது­காப்பு சட்­டம் 1972ன் கீழ், அரிய வகை உயி­ரி­ன­மாக வங்­காள ராட்­சத பல்­லி­கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இதனை துன்புறுத்துவோருக்கு 7 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும்.