மனித உரிமை மீறல் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

மனித உரிமை மீறல் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

1 mins read
ad93ae6a-4761-40e1-804c-5c68da25e740
-

புது­டெல்லி: அமெ­ரிக்­கா­வில் நடந்த இந்­திய, அமெ­ரிக்க அமைச்­சர்­கள் அள­வி­லான பேச்­சு­வார்த்­தைக்­குப் பின்­னர் இரு நாட்டு அமைச்­சர்­களும் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

அப்­போது அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் பிளிங்­கன் பேசு­கை­யில், "இந்­தி­யா­வில் மனித உரிமை மீறல்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அதை அமெ­ரிக்கா பார்த்­துக்கொண்­டு­தான் உள்­ளது," என்று கூறி­னார்.

அது­கு­றித்து இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் அப்­போது எந்த விளக்­க­மும் அளிக்­க­வில்லை.

இந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வில் இரு சீக்­கி­யர்­கள் தாக்­கப்­பட்ட சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. நியூ­யார்க் நக­ரில் நடைப்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அந்த சீக்­கி­யர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர் ஜெய்­சங்­கர் இது­

கு­றித்து தனது கருத்­து­களை வெளி­யிட்­டுள்­ளார். "இந்­தி­யா­வின் கொள்­கை­கள் குறித்து கருத்­துக் கூற பிற நாடு­க­ளுக்கு உரிமை இருந்­தால் அதே அள­வி­லான உரிமை இந்­தி­யா­வுக்­கும் உண்டு.

"அமைச்­சர் பிளிங்­க­னின் கருத்­தை­யும் அப்­ப­டித்­தான் பார்க்­கி­றேன். இந்­தி­யா­வில் உள்ள நில­வ­ரம் குறித்து அவர் ஒரு கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார்.

"இப்­போது அமெ­ரிக்­கா­வில் இரு சீக்­கி­யர்­கள் தாக்­கப்­பட்­டுள்­ள­னர். அதை நாங்­கள் கண்­கா­ணித்து வரு­கி­றோம்.

அமெ­ரிக்­கா­வில் நடந்த அமைச்­சர்­கள் அள­வி­லான சந்­திப்­பின்­போது மனித உரிமை மீறல் குறித்து எது­வும் விவா­திக்­கப்­ப­ட­வில்லை," என்­றார் ஜெய்­சங்­கர்.