ரூ.19,000 கோடியில் திட்டம்; 240,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ரூ.19,000 கோடியில் திட்டம்; 240,000 பேருக்கு வேலை வாய்ப்பு

2 mins read
d9b68284-57c3-4083-8166-6d445b845a34
-

புது­டெல்லி: ஜவு­ளித் துறை­யில் 19 ஆயி­ரம் கோடி ரூபாய் செலவில் செயல்­ப­டுத்­தப்­பட உள்ள உற்­பத்தி சார்ந்த மானி­யத் திட்­டத்­தின் மூலம் அந்தத் துறை பெரும் வளர்ச்சி காணும் என மத்­திய ஜவு­ளித்­துறை செய­லா­ளர் யு.பி.சிங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், இத்­திட்­டத்­தின் வழி சுமார் 2.4 லட்­சம் பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மற்ற துறைகளைப் போல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ஜவுளித்துறைக்கும் மத்திய அரசு உதவும் என்றும் அதற்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

புதிய திட்­டத்­தின் கீழ் முதலீடு செய்­வ­தற்­காக மொத்­தம் 67 ஜவுளி நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பம் அளித்­த­தா­க­வும் அவற்­றில் 61 நிறு­வ­னங்­க­ளின் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்கொள்­ளப்­பட்­டது என்­று அவர் கூறியுள்ளார்.

"இந்­தத் திட்­டம் செயல்­பாட்­டுக்கு வரும்­போது ஆண்­டு­தோறும் ரூ.184,000 கோடி மதிப்­பி­லான வர்த்­த­கம் நடக்­கும் என்­றும் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

மெகா முத­லீட்டு ஜவுளி பூங்காக்­கள் திட்­டத்­தின் கீழ் இது­வரை 13 மாநி­லங்­களில் இருந்து 17 விண்­ணப்­பங்­கள் வந்­துள்­ளன," என்­றார் யு.பி.சிங்.

எனி­னும் முதற்­கட்­ட­மாக ஏழு ஜவு­ளிப் பூங்­காக்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­படும் என்­றும் சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­களில் நில­வும் சூழ்­நிலை குறித்து தெரிந்து கொள்ள மத்­திய அரசு அதி­கா­ரி­கள் குழு அனுப்­பப்­படும் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.

கொரோனா தாக்­கத்­தால் பெரும் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்ள தொழில்­து­றை­யி­னரை ஊக்­கப்­ப­டுத்­தும் வித­மாக மத்­திய அரசு பல்­வேறு அறி­விப்­பு­களை வெளி­யிட்டு வரு­கிறது. தற்­போது ஜவுளித்­துறைக்கு என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த துறையைச் சார்்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.