200 கோடி டாலர்: மீண்டும் உதவி கேட்கும் இலங்கை

200 கோடி டாலர்: மீண்டும் உதவி கேட்கும் இலங்கை

1 mins read
03d4da54-4df4-45b9-a71e-76254196aa19
-

புது­டெல்லி: கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்கை மீண்­டும் இந்­தி­யா­வி­டம் நிதி உதவி கோரி­யுள்­ளது. இம்­முறை குறைந்­த­பட்­சம் 200 கோடி டாலர் தேவை என அந்­நாடு கேட்டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வுக்­கான இலங்கை தூதர் மிலிண்டா மொரா­கோடா, மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மனை நேற்று முன்­தி­னம் புது­டெல்­லி­யில் சந்தித்துப் பேசி­னார்.

அப்­போது இந்­தியா, இலங்கை இடை­யே­யான பொரு­ளா­தார கூட்­டு­றவு நில­வ­ரம் குறித்­தும் இந்­தி­யா­வின் உத­வியை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான சாத்­தி­யங்­கள் குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது.

குறிப்­பாக, உட­னடி தேவைக்­காக இலங்கை தரப்பு 200 கோடி அமெ­ரிக்க டாலர் கேட்­டி­ருப்­பதா­க­வும் அந்­நாட்­டில் சீனா­வின் ஆதிக்­கத்­தைக் குறைக்க இந்­தத் தொகையை அளிக்க இந்­திய அரசு முடி­வெ­டுத்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வி­டம் இருந்து புதி தாகப் பெறும் கடன் தொகை­யைக் கொண்டு ஆசி­யான் கிளி­ய­ரிங் யூனி­ய­னுக்கு செலுத்த வேண்­டிய தொகையை ஈடு­கட்ட இலங்கை அரசு முடிவு செய்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் உள்ள இலங்கை தூத­ர­கம் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில் பொரு­ளா­தார திட்­டங்­களை மாற்­றி­ய­மைப்­பது குறித்து அனைத்­து­லக நிதி­யத்­தி­டம் இலங்கை பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­க­வும் நிதி தேவைக்­கேற்ப இலங்­கைக்கு கைகொ­டுத்து உத­விய முதல் நாடாக இந்­தியா இருக்­கும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.