4 மில்லியன் மரணம்: உலக நிறுவனத்துக்கு இந்தியா மறுப்பு

4 மில்லியன் மரணம்: உலக நிறுவனத்துக்கு இந்தியா மறுப்பு

2 mins read
2c1ed52d-3985-4143-9771-d73e645d3fc2
-

புது­டெல்லி: கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் இந்­தி­யா­வில் 2021 இறு­தி­வரை 4 மில்­லி­யன் பேர் மாண்­டி­ருக்­க­லாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் வெளி­யிட்ட கருத்­துக்கு இந்­தியா மறுப்­புத் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்று காரண மாக 521,751 பேர் இறந்­த­தாக இந்­திய அர­சாங்­கம் தெரி­வித்­துள்ள நிலை­யில் அந்த எண்­ணிக்கை 4 மில்­லி­ய­னாக இருக்­கக்­கூ­டும் என 'நியூ­யார்க் டைம்ஸ்' சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்ட ஒரு கட்­டு­ரை­யில் உலக சுகா­தார நிறு­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 இறப்­பு­களை கணக்­கி­டு­வ­தில் சிக்­கல்­கள் உள்­ள­தா­க­வும் இது­தொ­டர்­பான தனது முயற்­சி­களை இந்­தியா தடுப்­ப­தா­க­வும் அந்­நி­று­வ­னம் கூறி உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "சில நாடு­கள் தரும் கொரோனா மரண எண்­ணிக்கை விவ­ரங்­களை அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­ளும் உலக சுகா­தார நிறு­வ­னம், இந்­தியா போன்ற நாடு­க­ளின் விவ­ரங்­களை கணி­த­வி­யல் கோட்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் வழங்­கு­மாறு கூறு­கிறது.

மக்­கள்­தொகை மிகுந்த, வெவ்­வேறு புவி­யி­யல் அமைப்பு கொண்ட ஒரு நாட்­டில் சிறு நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­படும் கணி­த­வி­யல் முறை­யைப் பின்­பற்­று­வது கடி­னம். எனவே உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் மரண கணக்­கீட்டு முறை இந்­தி­யா­வுக்­குப் பொருந்­தாது.

இந்­தி­யா­வின் 18 மாநி­லங்­களில் இருந்து தவ­றான தர­வு­களை பெற்­றி­ருப்­ப­தால் அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தி­ருக்­கும் விவ­ரம் சரி­யா­ன­தல்ல. மேலும், உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் கணிப்பு முற்­றி­லும் உண்மை என்­ப­தற்கு அறி­வி­யல் ஆதா­ரங்­கள் இல்லை," என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், 4 மில்­லி­யன் இந்­தி­யர்­கள் மாண்­டி­ருக்­க­லாம் என்­னும் கருத்தை காங்­கி­ரஸ் கட்சி முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி ஆத­ரித்து டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.