காங்கிரஸ், பிரசாந்த் தீவிர ஆலோசனை

காங்கிரஸ், பிரசாந்த் தீவிர ஆலோசனை

2 mins read
34326030-cb42-4b47-a84e-ceff46ce791f
பிரசாந்த் கிஷோர் (இடது), சோனியா காந்தி. படம்: ஊடகம் -

மூன்று நாள்களாக சோனியா வீட்டில் கூடிய மூத்த தலைவர்கள்

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மைக்­கும் தேர்­தல் வியூக நிபு­ணர் பிர­சாந்த் கிஷோ­ருக்­கும் இடை­யே­யான ஆலோ­சனை தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது.

டெல்­லி­யில் உள்ள காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி வீட்­டில் நடை­பெற்று வரும் இந்த தொடர் ஆலோ­ச­னை­யின்­போது இந்த ஆண்டு இறு­தி­யில் நடை­பெற உள்ள குஜ­ராத், இமாச்­ச­லப் பிர­தேச மாநி­லங்­க­ளுக்­கான சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் குறித்து முக்­கி­ய­மாக விவா­திக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், 2024ஆம் ஆண்டு நடை­பெற உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­தல் குறித்­தும் கருத்து பரி­மாற்­றங்­கள் நடந்­த­தா­கத் தெரி­கிறது.

வெளி­நாடு சென்­றி­ருப்­ப­தால் ராகுல் காந்தி இந்த ஆலோ­ச­னை­யில் பங்­கேற்­க­வில்லை. பிரி­யங்கா காந்தி, வேணு­கோ­பால், ரன்­தீப் சுர்­ஜே­வாலா, முகுல் வாஸ்­னிக், ப.சிதம்­ப­ரம், அம்­பிகா சோனி உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.

எதிர்­வ­ரும் தேர்­தல் களங்­களில் ராகுல் காந்­தியை காங்­கி­ர­சின் முக­மாக முன்­னி­றுத்­து­வது என முடி­வாகி உள்­ளது என்­றும் நிர்­வாக, அமைப்பு ரீதி­யி­லான பணி­க­ளை­பிரி­யங்கா கவ­னிப்­பார் என்­றும் காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த வியூ­கத்தை பிர­சாந்த் கிஷோர்­தான் வகுத்­துள்­ளார் என்­றும், தேர்­தல் வியூக நிபு­ண­ராக காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை அவ­ரு­டன் ஒப்­பந்­தம் செய்­து­கொண்ட பிறகு அவர் முழு வீச்­சில் கள­மி­றங்­கு­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மூன்று நாள்­க­ளாக நீடித்த ஆலோ­ச­னைக்­குப் பிறகு, முதன் முறை­யாக பிர­சாந்த் கிஷோ­ரு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தாக காங்­கி­ரஸ் அறி­வித்­துள்­ளது.

எனி­னும் மேல­திக தக­வல்­களை வெளி­யிட அக்­கட்­சி­யின் தலைமை செய்­தித் தொடர்­பா­ளர் ரன்­தீப்­சிங் சுர்­ஜே­வாலா மறுத்­து­விட்­ட­தாக இந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே காங்­கி­ரஸ் கட்­சி­யில் பிர­சாந்த் கிஷோரை இணைத்­துக்­கொள்­வது குறித்து அடுத்த ஒரு வாரத்­துக்­குள் முடி­வெ­டுக்­கப்­படும் என்று கட்­சி­யின் மூத்த தலை­வர் வேணு­கோ­பால் தெரி­வித்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்கு முழு­நேர தலை­வர் தேவை என அக்­கட்­சி­யின் அதி­ருப்தி தலை­வர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். கட்­சித் தலை­மை­யின் செயல்­பா­டு­க­ளை­யும் அவர்­கள் விமர்­சித்து வரும் நிலை­யில், பிர­சாந்த் கிஷோ­ரு­ட­னான கலந்­தா­லோ­சனை குறித்து கருத்து ஏதும் தெரி­விக்­க­வில்லை.