டெல்லியில் சட்டவிரோத கட்டடங்களை இடிக்கத் தடை

டெல்லியில் சட்டவிரோத கட்டடங்களை இடிக்கத் தடை

2 mins read
71b1dcce-1ffe-48b6-aedc-1d4b2b0d2dcf
ஜஹாங்கிர்பூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட சிறிய சில்லறைக்கடை ஒன்று இடிக்கப் படுவதை படம் காட்டுகிறது.படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: தலை­ந­கர் டெல்­லி­யில் உள்ள ஜஹாங்­கிர்­பூ­ரி­யில் சட்ட விரோ­தமா­கக் கட்­டப்­பட்ட கட்ட­டங்­களை இடிக்­கப்­ப­டு­வதை உச்ச நீதி மன்­றம் இரண்­டா­வது முறை­யாக தலை­யிட்டு நிறுத்த உத்­த­ர­விட்­டது.

கட்­ட­டங்­களை இடிக்க நீதி­மன்றம் தற்காலிகத் தடை விதித்­த­போ­தும் நேற்றுக் காலை கட்டடங் களை இடிக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. ஒன்­றரை மணி நேரத்துக்கு மேலாக கட்­ட­டங்­களை இடிக்­கும் பணி மும்முரமாக நடை­பெற்­றது.

இந்த நிலை­யில் இந்த விவ­ காரம் மீண்­டும் உச்ச நீதி­மன்­றத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

இதை­ய­டுத்து நகர மேயர், ஆணை­யர், நகர காவல்­துறை ஆணை­யர் உள்­ளிட்ட உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுக்கு தடை குறித்து தக­வல் தெரி­விக்­கும்­படி உச்ச நீதி­மன்­றம் அறி­வு­றுத்­தி­யது.

இத­னால் ஜஹாங்­கிர்­பூ­ரி­யில் கட்­ட­டங்­களை இடிக்­கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை, உச்ச நீதி­மன்றம் மறு­நாள் (இன்று) ஒத்­தி­வைத்­தது.

கடந்த சனிக்­கி­ழமை நடந்த மதக் கல­வ­ரத்­தைத் தொடர்ந்து ஜஹாங்­கிர்­பூ­ரி­யில் அத்­து­மீறி கட்டப்பட்­டுள்ள கட்­ட­டங்­களை இடிக்க வடக்கு டெல்லி மாந­க­ராட்சி உத்­தரவிட்­டது.

அனு­மன் ஜெயந்தி தினத்தை முன்­னிட்டு ஜஹாங்­கிர்­பூ­ரி­யில் உள்ள இந்து மதத்­தி­னர் பேர­ணி­யா­கச் சென்­ற­னர். இதற்கு காவல்­துறை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. எனி­னும் முஸ்­லிம்­கள் அதி­கம் வசிக்­கும் சி-பிளாக் பகு­தி வழியாக பேரணி சென்­ற­போது கல் வீசப்­பட்­டது. இதனால் இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே மோதல் ஏற் பட்டது.

இந்த மோத­லைத் தடுக்க முயற்சி செய்த காவல்­துறை மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இதன் காரணமாக துப்­பாக்­கிச் ­சூடு சம்­ப­வங்­களும் நடை­பெற்­றன. இதில் காவல்­துறை அதி­கா­ரி­களும் படு­கா­ய­ம­டைந்­த­னர். இத­னால் அப்­ ப­கு­தி­யில் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­ட­னர். வன்­மு­றை­யில் ஈடு­பட்ட இரு பிரி­வு­க­ளை­யும் சேர்ந்த 24 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவர்­களில் ஐவர் மீது பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. சுமார் 14 குழுக்­கள் அமைக்­கப்­பட்டு விசாரணை நடந்து வரு­கிறது.

"குற்­றம் செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் எந்­தப் பிரிவு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்­தா­லும் எந்த வித­மான பார­பட்­ச­மும் இல்­லா­மல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

"கண்­கா­ணிப்­புக் கேம­ராவை ஆராய்ந்து வரு­கி­றோம். வதந்­தி­கள் பரப்பி அமை­தியை சீர்­கு­லைப்­ப­தைத் தடுக்க சமூக வலைத்­த­ளங்­க­ளை­யும் கண்­கா­ணித்து வரு­கி­றோம்," என்று டெல்லி காவல் ஆணை­யர் ராகேஷ் அஸ்­தானா கூறி­யுள்­ளார்.