ஆந்திராவைச் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றுவேன்: அமைச்சர் ரோஜா சூளுரை

2 mins read
9aa6a09f-5c55-4eea-b78c-69b229599073
அமைச்சரான ஆர்கே ரோஜா தனது கணவர் ஆர்.கே. செல்வமணி, மகன், மகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். படம்: எக்ஸ்பிரஸ் இணையத் தளம் -

விஜ­ய­வாடா: நடி­கை­யாக இருந்து அர­சி­யல்­வா­தி­யாக மாறிய நடி­கை­யும் எம்­எல்­ஏ­வு­மான ஆர்கே ரோஜா அண்­மை­யில் ஆந்­தி­ரா­வின் சுற்­றுலா, கலா­சார, இளை­யர்­நல அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து புதன்­கி­ழமை அன்று அமைச்­சர் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட அவர், ஆந்­தி­ராவை சிறந்த சுற்­று­லாத் தள­மாக மாற்­று­வேன் என்று சூளு­ரைத்­துள்­ளார். கண்­டி­கோட்டா-பெங்­க­ளூரு பேருந்து சேவைக்­கான கோப்­பில் அவர் அமைச்­ச­ராக முதல் கை யெழுத்­தைப் போட்டு அச்­சேவை யைத் தொடங்­கி­வைத்­தார்.

பின்­னர் பேசிய ஆர்கே. ரோஜா, இந்­தி­யா­வி­லேயே முதன்மை சுற்­றுலா மைய­மாக ஆந்­தி­ராவை உரு­வாக்­கு­வேன் என்­றும் அதற்­கான பல திட்­டங்­களை சுற்­று­லாத் துறை ஏற்­கெ­னவே தொடங்­கி­விட்­டது என்­றும் கூறி­னார். தமக்கு அமைச்­சர் பொறுப்பு வழங்­கிய ஆந்­திரா முதல்­வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்­டிக்கு அவர் நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

இதற்­கி­டையே அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு அவ­ரது சொந்தத் தொகு­தி­யான நக­ரிக்கு முதல் முறை­யாக செவ்­வாய்க் கிழமை மாலை சென்­றார். திறந்­த­வே­னில் நின்­ற­படி அவர் மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார். அப்­போது அந்த ஊர் மக்­கள் தெரு­வின் இரு பக்­க­மும் வரி­சை­யாக நின்று அவரை மலர் தூவி வர­வேற்­ற­னர். பளூ­தூக்கி மூலம் அவ­ருக்கு ராட்­சத ரோஜா மாலை அணி­விக்­கப்­பட்­டது.

இதை அன்­பு­டன் ஏற்­றுக் கொண்ட ஆர்கே ரோஜா நேற்று திருப்­ப­திக்­குச் சென்று ஏழு­ம­லை­யா­னை­யும் தரி­சித்­தார்.

'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் திரைத் துறையுலகுக்கு அறி முகமானவர் நடிகை ரோஜா. முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், பின்னர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைத்துக்கொண்டார். ஜெகன் மோகன் கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் அவர் உள்ளார்.