மணப்பெண் ஓட்டம்

மணப்பெண் ஓட்டம்

1 mins read
520c2777-e84a-44fd-858e-59c2165d25e1
-

கொல்­லம்: கேரளாவில் மண­மே­டை­யி­லி­ருந்து மணப்ெபண் எழுந்து ஓடி­ய­தால் திரு­மண விருந்­தி­னர்­கள் அதிர்ச்­சி­அடைந்தனர்.­ கொல்­லம் அருகே மண் துருத்தி பகு­தி­யைச்சேர்ந்த வாலி­ப­ருக்கும் கல்­லு­நா­கம் பகு­தி­யைச் சேர்ந்த பெண்­ணுக்கும் திருமணம் நிச்சயித்து இரட்­ட­கு­ளங்­கரை பகு­தி­யில் உள்ள கோவில் மண்­ட­பத்­தில் திருமணம் நடைபெற்றது. திரு­மண நாளன்று மாப் பிள்ளையும் மணமகளும் மாலையை மாற்றிக் கொள்ளும்போது மாப்­பிள்­ளையைத் தடுத்து நிறுத்­திய மணப்­பெண், திடீ­ரென மண­மே­டை­யில் இருந்து கீழே இறங்கி ஓடி­ ஒரு அறைக்­குள் புகுந்து பூட்­டிக்­கொண்­டார். அவர் வெளியே வராததால் காவல்­து­றைக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு வந்த காவல்­து­றையினர் பெண்ணை வெளியே அழைத்து விசாரித்­த­தில் அவரது காதல் விவ­கா­ரம் தெரி­ய­வந்­தது. தான் ஒரு­வரை காத­லிப்பதா­க­வும் பெற்­றோர் கட்­டாயப் ­ப­டுத்­தி­ய­தால் இந்­தத் திரு­ம­ணத்­துக்­குச் சம்மதித்தாகவும் அவர் கூறினார். அதோடு மணப்­பெண் பிடி­வா­த­மாக திரு­ம­ணம் செய்து ­கொள்ள மறுத்து­விட்­டார். இத­னால் மண­ம­கன் வீட்­டா­ருக்கு நஷ்­ட­ஈடு கொடுக்க பெண் வீட்­டார் ஒப்புக் கொண்டனர்.