பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாகிறது

பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாகிறது

1 mins read
ab00ae31-b5aa-430f-8a14-d46103521948
-

லூதி­யானா: ஹரி­யானா, உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லங்­க­ளையும்; டெல்­லி­யை­யும் தொடர்ந்து பஞ்­சாப் மாநி­லத்­தி­லும் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வதை அம்­மாநில அரசு கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளது. கடந்த சில நாட்­க­ளாக டெல்லி உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ய­டுத்து, டெல்லி, ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய மாநில அர­சு­கள் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என கடந்த வாரம் அறி­வித்­தன.

இந்­நி­லை­யில், பஞ்­சாப் மாநில அரசு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், "கடந்த சில நாள்களாக நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. எனவே, பொது­மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது மீண்­டும் கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­கிறது. குறிப்­பாக, பேருந்து, ரயில், விமா­னம் உள்­ளிட்ட பொதுப் போக்­கு­வ­ரத்து, திரை­யரங்­கு­கள், கடைத்­தொ­கு­தி­கள், பள்ளி வகுப்­ப­றை­கள் உட்­பட மக்­கள் கூடும் இடங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்" என கூறப்­பட்­டுள்­ளது. பஞ்­சா­பில் நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி 24 மணி நேரத்­தில் 30 புதிய தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இந்தியா முழு­வ­தும் 2,380 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது 4வது அலைக்கு அறிகுறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.