புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. டெல்லியின் ரோகிணி நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாதுகாப்புக் காவலர் திடிரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இருப்பினும், யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

