தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானில் உயர்கல்வி கற்றால் இந்தியாவில் வேலை பெற முடியாது

1 mins read
27f211d2-2351-435a-a465-14e5a1be6e02
-

புது­டெல்லி: இந்­திய மாண­வர்­கள் உயர்­கல்வி பயில்­வ­தற்­காக பாகிஸ்­தான் செல்­ல­வேண்­டாம் என்­றும் அங்கு பெறும் பட்­டம் இந்­தி­யா­வில் செல்­லு­ப­டி­யா­காது என, யுஜிசி எனும் பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு­வும் 'ஏஐ­சி­டிஇ' எனும் அகில இந்­தி­யத் தொழில்­நுட்­பக் கல்­விக் குழு­வும் தெரி­வித்­துள்­ளன.

இது தொடர்­பாக கூட்­டாக இவை வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யில், "பாகிஸ்­தா­னில் உயர்­கல்வி பயில யாரும் செல்ல வேண்­டாம். இந்­தி­யர்­களோ அல்­லது வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களோ பாகிஸ்­தா­னில் மேற்­ப­டிப்பு பயின்­றால் அவர்­க­ளது பட்­டம் இந்­தி­யா­வில் செல்­லாது. மேலும் இந்­தி­யா­வில் அவர்­கள் வேலை­வாய்ப்பு பெற­வும் முடி­

யாது.

இருப்­பி­னும், அக­தி­கள் யாரே­னும் பாகிஸ்­தா­னில் உயர்­கல்வி பெற்­றி­ருந்­தால், இந்­திய உள்­துறை அமைச்­ச­கத்­தின் பாது­காப்பு ஒப்­பு­தல் பெற்று இந்­தி­யா­வில் குடி­யு­ரிமை பெற்ற பின்­னர், அவர்­கள் இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்­புக்கு விண்­ணப்­பிக்­க­லாம் என அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து விளக்­க­ம­ளித்­துள்ள ஏஐ­சி­டிஇ தலை­வர் பேரா­சி­ரி­யர் அனில் டி. சஹஸ்­ர­புதே, "பாகிஸ்­தா­னில் உள்ள பல்­வேறு கல்வி நிறு­வ­னங்­க­ளின் தர­மும் கேள்­வி­யாக உள்­ளது. ஏற்­கெ­னவே சீனா, உக்­ரேன் என வெளி­நாட்­டில் பயின்ற மாண­வர்­கள் சில பிரச்­சி­னை­க­ளால் கல்வி தடைப்­பட்டு நிற்­கின்­ற­னர். எனவே, பெற்­றோர், மாண­வர் நலன் கருதி இதனைக் கூறி­யுள்­ளோம்," என்­றார்.

இதற்கு கல்­வி­யா­ளர்­கள் தரப்­பில் ஒரு­பு­றம் கண்­ட­னக் குர­லும் எழுந்து வரு­கிறது. எல்லா வெளி­நா­டு­க­ளைப் போலவே பாகிஸ்­தா­னை­யும் பாவிக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.