பணியிட மாறுதலை ரத்து செய்ய மாணவிகளைப் பூட்டிவைத்து மிரட்டல்

பணியிட மாறுதலை ரத்து செய்ய மாணவிகளைப் பூட்டிவைத்து மிரட்டல்

1 mins read
b98e191c-4412-4f9c-984b-af2c9d77cf4c
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் லக்­கிம்­பூர் கேரி­யைச் சேர்ந்த இரண்டு ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளுக்­குப் பணி­யிட மாறு­தல் வழங்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து 24 மாண­வி­களை மொட்டை மாடி­யில் பூட்டி வைத்­த­னர்.

அதன்­பின் அவர்­க­ளி­டம் பேச்சு­வார்த்தை நடத்­திய மாவட்ட நிர்­வாக அதி­கா­ரி­கள், மாண­வி­களை மீட்டனர்.

சென்ற வியா­ழக்­கி­ழமை நடந்த இச்­சம்­ப­வம் குறித்து லக்­கிம்­பூர் கேரி­யின் கல்வி அதி­காரி லக்­‌ஷ்­மி­காந்த் பாண்டே, "ஆசி­ரி­யர்­கள்­மீ­து ஏற்­கெ­னவே பல்­வேறு புகார்­கள் உள்ளதால் ஒழுங்கு நட­வடிக்­கை­யா­கவே இரு­வ­ரும் பணி­யிட மாறு­தல் செய்­யப்­பட்­ட­னர். ஆனால், அதை ரத்து செய்ய அழுத்­தம் தரும் வகை­யில் அவர்கள் இந்த மோச­மான செய­லில் ஈடு­பட்­ட­னர்," என்­றார். மனோ­ரமா மிஸ்ரா, கோல்டி கட்­டி­யார் என்ற அந்த ஆசி­ரி­யர்கள் மீது வழக்­குப் பதியப்பட்டுள்ளது.