விஜயவாடா: மனவளர்ச்சி குன்றிய பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த 23 வயது மனவளர்ச்சி குன்றிய பெண், கடந்த 19ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து, காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பெற்றோரின் கைபேசிக்கு ஏற்கப்படாத அழைப்பு ஒன்று வந்தது. அது மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் என்பவருடையது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் போலிசார் மந்தமாக செயல்பட்ட நிலையில், விஜயவாடா பழைய அரசு பொது மருத்துவமனையின் அறையில் அடைக்கப்பட்டிருந்த தங்களது மகளைப் பெற்றோரே கடந்த 20ஆம் தேதி மீட்டனர்.
தொடர்ந்து, அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த ஸ்ரீகாந்த், பவன் கல்யாண், பாபுராவ் ஆகியோர் கைதாகினர்.

