தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூமிக்கடியில் பதுக்கிய ரூ.10 கோடி பணம் மீட்பு

1 mins read
94d1fb23-8d93-4c87-adfd-3b3e39f2cc7c
இரவில் தொடங்கிய பணம் எண்ணும் பணி அதிகாலையில் முடிவடைந்த நிலையில், ரூ.9.78 கோடி பணமும் 19 கிலோ வெள்ளியும் மீட்கப்பட்டதாக தகவல். படம்: இந்திய ஊடகம் -

மும்பை: மும்­பை­யில் நகை வியா­பாரி ஒரு­வ­ரின் கடை­யில் பொருள் சேவை வரித்­ துறை, வரு­மான வரித் ­துறை அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில், பூமி­யில் பெரும் பள்­ளம் தோண்டி கட்டுக் கட்­டா­கப் பணம் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், கிலோ கணக்கில் சுவ­ரில் பதித்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெள்­ளிக் கட்­டி­களும் ­மீட்கப்பட்டன.

இர­வில் தொடங்­கிய பணம் எண்­ணும் பணி அதி­கா­லை­யி­ல் தான் முடி­வ­டைந்­தது எனவும் மொத்தம் ரூ.9 கோடியே 78 லட்­சம் பண­மும் 19 கிலோ வெள்­ளிக் கட்­டி­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாகவும் தக­வல்­கள் கூறின.

மகா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­நகரில் தங்க விற்­பனை வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வந்த சாமுண்டா நிறு­வ­னம் பொருள் சேவை வரியைக் கட்டாமல் மோச­டி­யில் ஈடு­பட்டு வந்­தது கண்­டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்­டில் ரூ.22 கோடி­யாக இருந்த இந்­நிறுவனத்­தின் வரு­வாய் மூன்றே ஆண்­டு­களில் 1,764 கோடி ரூபா­யாக பல மடங்கு உயர்ந்­தது.

விசா­ரணையில், வரு­மான வரித்­து­றையினருக்கு கணக்கு காட்­டா­மல் பல நிறு­வ­னங்­களை நடத்திவந்­தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கிடையே, பணம் கைப்­பற்­றப்­பட்ட இடத்­தின் உரி­மை­யா­ள­ரும் குடும்ப உறுப்­பி­னர்­களும் பணம், வெள்ளிக் கட்டிகள் குறித்து தங்­க­ளுக்கு எது­வும் தெரி­யாது என கூறி­யதை அடுத்து, குறிப்பிட்ட இடத்தை மூடி முத்திரை வைத்தனர்.