லக்கிம்பூர் வன்முறை: குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மகனின் பிணை ரத்து

லக்கிம்பூர் வன்முறை: குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மகனின் பிணை ரத்து

2 mins read
5dc4c799-6e5f-48e6-87ba-b5f0c8f8543b
-

லக்னோ: லக்­கிம்­பூர் வன்­முறை வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள மத்­திய இணை­ய­மைச்­சரின் மகன் ஆஷிஷ் மிஸ்­ரா­வுக்கு வழங்­கப்­பட்ட பிணையை உச்ச நீதி­மன்­றம் ரத்து செய்­ததை அடுத்து, அவர் காவல்­து­றை­யி­டம் சரண் அடைந்­தார். இதை­ய­டுத்து அவர் மீண்­டும் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 3ஆம் தேதி உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் லக்­கிம்­பூர் பகு­தி­யில் விவ­சா­யி­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது அவ்­வ­ழியே வந்தார் மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்‌ரா. அவரை பாஜ­க­வி­னர் பலர் தங்­க­ளது வாக­னங்­களில் பின்­தொ­டர்ந்­த­னர்.

இந்­நி­லை­யில், அமைச்­ச­ரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார், ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டிருந்த விவ­சா­யி­கள் மீது மோதி­யது. இதில் நான்கு விவ­சா­யி­கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து அப்­ப­கு­தி­யில் வன்­முறை வெடித்­தது. அப்­போது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லின்­போது எட்டு பேர் பலி­யா­கி­னர்.

ஆஷிஷ் மிஸ்­ரா­வின் கார் மோதி­ய­தால்­தான் விவ­சா­யி­கள் உயி­ரி­ழந்­த­தா­கக் குற்­றம்­சாட்­டப்­பட்­டதை அடுத்து அவர் கைதா­னார். பின்­னர் சிறை­யி­லும் அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், தமக்­குப் பிணை வழங்­கக்­கோரி அல­கா­பாத் உயர் நீதி­மன்­றத்­தில் அவர் மனுத்­தாக்­கல் செய்ய, அதை விசா­ரித்த நீதி­மன்­றம் கடந்த பிப்­ர­வரி 10ஆம் தேதி பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது.

இதை எதிர்த்து உயி­ரி­ழந்த விவ­சா­யி­யின் குடும்­பத்­தார் உச்ச நீதி­மன்­றத்தை அணு­கி­னர். அந்த மனு மீதான விசா­ரணை உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி தலை­மை­யி­லான சிறப்பு அமர்­வின் முன் நடை­பெற்று வந்­தது. இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­ப­தி­கள், கடந்த 18ஆம் தேதி தீர்ப்­ப­ளித்­த­னர்.

ஆஷிஷ் மிஸ்­ரா­வுக்கு வழங்­கப்­பட்ட பிணை ரத்து செய்­யப்­படு­வ­தா­க­வும் ஒரு வாரத்­துக்­குள் அவர் காவல் நிலை­யத்­தில் சரண் அடைய வேண்­டும் என்­றும் நீதி­பதி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

அதன்­படி அவர் காவல் நிலை­யத்­தில் சர­ண­டைந்த பின்­னர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.