தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக எம்எல்ஏ, எம்பி அதிரடிக் கைது: மும்பை காவல்துறை தவறான வழக்கு பதிவு செய்யாது என்கிறது சிவசேனா

2 mins read
3c507ebe-2e2a-414a-94e6-8b338baf9ff2
சஞ்சய் ராவத். படம்: ஊடகம் -

மும்பை: மும்பை காவல்­துறை ஒரு­போ­தும் தவ­றான வழக்­கு­க­ளைப் பதிவு செய்­த­தில்லை என சிவ­சேனா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சஞ்­சய் ராவத் (படம்) கூறி­யுள்­ளார்.

மேலும், சில மோச­டிப் பேர்­வ­ழி­கள் மீது பொது­மக்­கள் கல்­லெ­றிந்­தால் பாஜ­க­வுக்கு ஏன் வலிக்க வேண்­டும் என்­றும் அவர் கேள்வி எழுப்பி உள்­ளார்.

மும்­பை­யில் உள்ள மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வின் தனிப்­பட்ட இல்­லத்­தின் முன் பஜ­னைப் பாடல்­க­ளைப் பாடப்­போவ­தாக அறி­வித்த பாஜக எம்­எல்ஏ ரவி ராணா­வும் அவ­ரது மனை­வி­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நவ்­நீத் ராணா­வும் கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­ட­னர்.

முதல்­வ­ருக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும்­வி­த­மாக இரு­வ­ரும் இவ்­வாறு அறி­வித்­தி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து அவர்­கள் மீது நட­வ­டிக்கை பாய்ந்­தது. இதற்கு பாஜக தரப்­பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், காவல் நிலை­யத்­தில் இருந்த இரு­வ­ரை­யும் பாஜக மூத்த தலை­வர் கிரித் சோமையா சந்­தித்­து­விட்டு காரில் திரும்­பிக் கொண்­டி­ருந்­தார்.

அப்­போது அவ­ரது காரை முற்­று­கை­யிட்ட சிவ­சேனா தொண்­டர்­கள் கற்­க­ளை­யும் கால­ணி­க­ளை­யும் காரின் மீது வீசி தாக்­கி­ய­தா­க­வும் அவர் இதில் காய­ம­டைந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், விசா­ரணை நடக்­கும் இடத்­தில் கிரித் சோமையா­வுக்கு என்ன வேலை என சஞ்­சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

"மத்­திய அர­சின் விசா­ரணை முக­மை­கள் சிவ­சேனா தலை­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­து­வது குறித்து நாங்­கள் பல­முறை கேள்வி எழுப்­பி­யுள்­ளோம்.

"அதற்கு, போது­மான கார­ணங்­கள் இருப்­ப­தால்­தான் விசா­ரணை நடக்­கிறது என பாஜ­க­வி­னர் கூறு­வர்.

"அதே­போல் மும்பை காவல்­து­றை­யை­யும் நம்ப வேண்­டும். அவர்­கள் ஒரு­போ­தும் தவ­றான வழக்கு பதிவு செய்­தது இல்லை.

"சில துரோ­கி­கள் மீது கல்­வீச்சு நடக்­கிறது. ரவி ராணா ஒரு பொய்­யர். எனவே அவ­ரைப் பொருட்­ப­டுத்த வேண்­டாம்," என்று சஞ்சய் ராவத் மேலும் தெரிவித்துள்ளார்.