திருச்சூர் பூரம் விழாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் புகழ்­பெற்ற திருச்­சூர் பூரம் விழா எதிர்­வரும் மே 10ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது.

இந்­நி­லை­யில் அந்த விழா­வுக்­கான கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

மேலும், விழா­வை­யொட்டி வாண வேடிக்கை நிகழ்வை நடத்­த­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தால் பக்­தர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

திருச்­சூர் வடக்கு நாதன் கோவி­லில் நடை­பெ­றும் திருச்­சூர் பூரம் திரு­விழா உல­க­ள­வில் பெயர் பெற்ற ஒன்று. இந்த விழா­வில் உள்­நாட்­டில் இருந்து மட்­டு­மல்­லா­மல், பல்­வேறு நா­டு­களில் இருந்­தும் ஏரா­ள­மான பக்­தர்­கள் பங்­கேற்­பது வழக்­கம்.

யானை­கள் அணி­வ­குப்­பும் வாண வேடிக்­கை­யும் இந்­தத் திரு­வி­ழா­வின் சிறப்பு அம்­சங்­க­ளா­கும்.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக திருச்­சூர் பூரம் விழா­வுக்­குப் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னால் பக்­தர்­கள் சோகத்­தில் இருந்­த­னர்.

தற்­போது தொற்­றுப்­ப­ர­வல் கட்­டுக்­குள் வந்­துள்­ளதை அடுத்து, அனைத்து கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்டு, பழை­ய­படி திரு­விழா விம­ரி­சை­யாக நடை­பெற உள்­ளது.

எனி­னும் பக்­தர்­கள் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிந்து விழாவில் பங்­கேற்க வேண்­டும் என அம்­மாநில அரசு அறிவு­றுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!