புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் கடுமையான வெயில் மற்றும் வெப்பம் காரணமாக அங்குள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடுமுறை என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேவேளையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 31 வரை திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும். முன்னதாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

