பஞ்சாப், டெல்லி முதல்வர்கள் 'அறிவுப் பகிர்வு' ஒப்பந்தத்தில் கையெழுத்து

பஞ்சாப், டெல்லி முதல்வர்கள் 'அறிவுப் பகிர்வு' ஒப்பந்தத்தில் கையெழுத்து

1 mins read
8cdfad43-12bf-4e88-9243-a154d36bc584
-

புது­டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்­யும் பஞ்­சாப் மாநி­ல­மும் டெல்­லி­யும் 'அறி­வு­ப்ப­கிர்வு' ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் மற்­றும் பஞ்­சாப் முதல்­வர் பக­வந்த் சிங் மான் ஆகியோரிடையே நேற்று அந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. இதன் மூலம் கல்வி, உள்­கட்­ட­மைப்பு, சுகா­தா­ரம், விவ­சா­யம் ஆகிய துறை­களில் டெல்­லி­யும் பஞ்­சாப்­பும் தங்­க­ளுக்­குள்ள தகவல் அறி­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும்.

பின்­னர் இது­கு­றித்து பஞ்­சாப் மாநில முதல்­வர் பக­வந்த் சிங் மான் பேசுகையில், பஞ்­சாப் மாநி­லத்­தில் 117 பள்­ளி­கள் மற்­றும் மொஹல்லா மருந்­த­கங்­கள் உரு­வாக்­கப்­படும். கல்வி, சுகா­தா­ரம் மற்­றும் அதி­கா­ரம் ஆகி­யவை தனது அர­சாங்­கத்­தின் முன்­னு­ரிமை. இந்­தத் துறை­களில் பல்­வேறு முன்­னேற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்ள டெல்­லி­யில் இருந்து பஞ்­சாப் கற்­றுக்­கொள்ள முடி­யும். அதே­போல் விவ­சா­யத்­தைப் பற்றி பஞ்­சா­ப்பி­டம் இருந்து டெல்­லி­யும் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­றார். தொடர்ந்து பேசிய டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், "நாங்­கள் மட்­டும் நல்ல பணி­களைச் செய்­தோம் என்று சொல்­வது தவறு. நாடு முழு­வ­தும் பல சிறந்த தீர்வு­கள் இருந்­தா­லும், கட்­சி­கள் மற்­றும் மாநி­லங்­க­ளின் இடையே பிள­வு­கள் இருந்­தன. அதி­லி­ருந்து எது­வும் கற்­றுக்­கொள்ள­வில்லை. ஒவ்­வொரு மாநி­ல­மும் பிறர் செய்­யும் நல்ல பணி­களில் இருந்து கற்­றுக்­கொண்டால் இந்­தியா முன்­னேற்­றப் பாதையை நோக்­கிச் செல்­லும்," என்­றார்.