கொவிட்-19 அச்சுறுத்தல் இன்னும் அகலவில்லை: மோடி எச்சரிக்கை

கொவிட்-19 அச்சுறுத்தல் இன்னும் அகலவில்லை: மோடி எச்சரிக்கை

2 mins read
bb11c47e-d95c-40af-87cf-47e50e91755a
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 அச்­சு­றுத்­தல் இன்­னும் நீங்­க­வில்லை என்­ப­தால் அத்­தொற்­றுக்கு எதி­ரான அனைத்து முன்­னெச்­ச­ரிக்­கை­க­ளை­யும் மக்­கள் கடைப்­பிடிக்க வேண்­டும் என்­று பிர­த­மர் நரேந்­திர மோடி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 2,927 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னால் மேலும் 32 பேர் இறந்­து­போ­யி­னர்.

நாட்­டில் கொரோனா பர­வல் மீண்­டும் உய­ரத் தொடங்­கி­யுள்­ளதை அடுத்து, மாநில முதல்­வர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

"ஓமிக்­ரான் திரி­பும் அதன் துணைத் திரி­பு­களும் ஐரோப்­பா­வில் எத்­த­கைய மோச­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை நாம் கண்­டுள்­ளோம். கடந்த சில மாதங்­களில், ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் கார­ண­மா­கப் பல நாடு­களி­லும் கொரோனா பர­வல் அதி­க­ரித்­துள்­ளது. மற்ற நாடு­களை ஒப்­பிட, இந்­தி­யா­வில் நிலைமை கட்­டுக்­குள் உள்­ளது," என்று பிர­த­மர் மோடி கூறி­னார்.

சில மாதங்­க­ளுக்­கு­முன் இந்­தி­யா­வில் வீசிய கொவிட்-19 அலை பல பாடங்­க­ளைக் கற்­றுத்­தந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"நாட்­டில் சுகா­தார உள்­கட்­ட­மைப்­பை­யும் உயிர்­வாயு விநி­யோ­கக் கொள்­ள­ள­வை­யும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளோம். மூன்­றா­வது அலை­யின்­போது எந்த மாநி­ல­மும் நிலைமை கைமீ­றிப் போய்­விட்­ட­தா­கக் கூற­வில்லை. நமது தடுப்­பூ­சித் திட்­ட­மும் இதற்­குக் கைகொ­டுத்­தது," என்­றார் திரு மோடி.

பெரி­ய­வர்­களில் 96 விழுக்­காட்­டி­னர் முதல் தவணை தடுப்­பூ­சி­யை­யும் 15 வய­துக்கு மேற்­பட்­டோ­ரில் 83 விழுக்­காட்­டி­னர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யை­யும் போட்­டு­விட்­டதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பிள்­ளை­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வது பெற்­றோர்­க­ளுக்­குக் கவலை அளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

"ஆயினும், அதிக அள­வி­லான குழந்­தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. மார்ச் மாதத்­தில் 12-14 வய­திற்­குட்­பட்ட சிறா­ருக்­குத் தடுப்­பூசி போடத் தொடங்­கி­னோம். இப்­போது 6-12 வய­திற்­குட்­பட்ட குழந்­தை­க­ளுக்கு கொவேக்­சின் தடுப்­பூசி போட ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று திரு மோடி தெரி­வித்­தார்.

தகு­தி­யுள்ள அனை­வ­ரும் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மா­றும் அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

அத்­து­டன், சுகா­தார உள்­கட்­ட­மைப்­பு­களை விரைந்து மேம்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"படுக்­கை­கள், செயற்கை சுவா­சக் கரு­வி­கள், உயிர்­வாயு ஆலை­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்­த­மட்­டில் இப்­போது நாம் மேம்­பட்ட நிலை­யில் இருக்­கி­றோம். இப்­போது, அவை செயல்­பாட்­டில் இருப்­ப­தை­யும் ஏதே­னும் இடை­வெளி இருந்­தால் அதனை நிரப்­பு­வ­தை­யும் நாம் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்," என்று பிர­த­மர் மோடி கேட்­டுக்­கொண்­டார்.

இத­னி­டையே, கேரள மாநி­லத்­தில் முகக்­க­வ­சம் அணி­வது மீண்­டும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. விதிமீறுவோர்மீது அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.