தரையிறங்கியபோது டயர் வெடித்தது; பெரும் விபத்து தவிர்ப்பு

தரையிறங்கியபோது டயர் வெடித்தது; பெரும் விபத்து தவிர்ப்பு

1 mins read
48f77d08-5a97-494b-a4ef-f4b6958a44d8
-

பெங்­க­ளூரு: தரை­யி­றங்­கி­ய­போது தாய் ஏர்­வேஸ் விமா­னத்­தின் டயர் வெடித்த சம்­ப­வம் பெங்­க­ளூரு கெம்­ப­கௌடா அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு நிகழ்ந்­தது. அதிர்ஷ்ட வசமாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.

"விமா­னத்­தின் பின்­புற டயர்­களில் ஒன்று வெடித்­தது குறித்து விமானி அறிந்­தி­ருக்­க­வில்லை என்­ப­து­தான் அதிர்ச்­சி­யான தக­வல். விமான நிலைய ஊழி­யர்­களே முத­லில் அத­னைக் கண்­டு­பி­டித்­து, தகவல் தந்தனர். நல்ல வேளை­யாக, விமா­னம் தரை­யி­றங்­கி­ய­போது எந்த அசம்பா­வி­த­மும் ஏற்­ப­ட­வில்லை," என்று விமான நிலைய உய­ர­தி­காரி ஒரு­வர் விளக்­கி­னார்.

உட­ன­டி­யாக அவ்­வி­மா­னம் பாது­காப்­பான இடத்­திற்கு இழுத்­துச் செல்­லப்­பட்டு, தொழில்­நுட்­பப் பணி­யா­ளர்­கள் அத­னைச் சோதித்­த­னர்.

இத­னால், அங்­கி­ருந்து அந்த விமா­னம் மீண்­டும் பேங்­காக் புறப்­பட்­டுச் செல்­வது தாம­த­மா­ன­தால் பய­ணி­கள் சில மணி நேரம் காத்­தி­ருக்க நேர்ந்தது.