மோடிக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி

மோடிக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி

2 mins read
72728c70-b40f-4aea-b1f0-470b2982b5f4
-

கோல்கத்தா: எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளைப் பிர­த­மர் மோடி மாற்­றான்­தாய் மனப்­பான்­மை­யு­டன் பார­பட்­ச­மாக நடத்தி வரு­வ­தாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

இதே­போல், தெலுங்­கானா முதல்­வர் கே. சந்­தி­ர­சே­கர ராவ், தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்­டோ­ரும் கடும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

மகா­ராஷ்­டிரா, மேற்கு வங்­கம், தெலுங்­கானா, ஆந்­திரா, கேரளா, ஜார்க்­கண்ட், தமிழ்­நாடு ஆகிய ஏழு மாநி­லங்­க­ளி­லும் பெட்­ரோல், டீசல் மீதான வாட் வரி­யைக் குறைக்­கா­மல் உள்­ள­தால்­தான் மக்­கள் பெரும் சிர­மங்­க­ளுக்கு ஆளாகி வரு­வதாக மோடி கூறி­யி­ருந்­தார்.

பிர­த­மர் குறிப்­பிட்ட ஏழு மாநி­லங்­க­ளி­லும் பாஜக அல்­லாத கட்சி ­க­ளின் ஆட்சி நடந்து வரு­கிறது.

கடந்த புதனன்று அனைத்து மாநில முதல்­வர்­களுடனும் பிரதமர் மோடி ஆலோ­சித்தார்.

அப்போது, அவர் கூறிய கருத்தை ஏற்க மறுத்­துள்ள முதல்­வர்­கள், பெட்­ரோல், டீசல் விலை உயர்­வுக்கு கார­ண­மாக உள்ள மத்­திய அரசே, விலை உயர்­வைக் குறைக்கவும் முன்­வ­ர­வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

மம்தா பானர்ஜி பேசி­ய­போது, "பிர­த­மர் மோடி நடத்­திய ஆலோ­சனைக் கூட்­டம் ஒரு­ சா­ரா­ருக்கு மட்­டுமே ஆத­ர­வாக இருந்­தது. அவ­ரது கருத்­து­டன் எனது கருத்து ஒத்­துப்­போ­க­ாது. எதிர்க்­கட்சியினர் ஆளும் மாநி­லங்­களை மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன் மோடி நடத்­து­கி­றார்," என்­றார்.

அதே­போல், சந்­தி­ர­சே­கர ராவ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "காணொளி வாயி­லாக மோடி நாட­கம் நடத்­தி­னார். அவ­ரது பேச்சை முதல்­வர்­கள் 4 மணி நேரம் கேட்­க­வேண்­டும். கொரோனா பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் பற்றி பேசப் போவ­தாக கூறி­விட்டு, அவர் பேசி­யது வேறு விவ­கா­ரம்,'' என்­றார்.

பெட்­ரோல், டீசல் விலை உயர்வு தொடர்­பான பிர­த­ம­ரின் குற்­றச்­சாட்டு, முழு பூச­ணிக்­காயை சோற்­றில் மறைப்­பதுபோல் உள்­ள­தாக சட்­டப்­பே­ர­வை­யில் முதல்­வர் ஸ்டா­லின் நேற்று விமர்­சித்­தார்.

எரி­பொ­ருள்­கள் மீதான கலால் வரியை மத்­திய அரசு குறைக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்ள தமி­ழக நிதி­ய­மைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், எட்டு ஆண்­டு­களில் பெட்­ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்­திய அரசு 200% உயர்த்­தி­விட்­டது என­வும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கிை­டயே, "மாநி­லங்­க­ளுக்கு அதிக வரு­வாய் கிடைப்­பதே வாட் வரி­யால்­தான். அதை குறைக்­கச் சொல்­வ­தில் என்ன நியா­யம் உள்ளது," என முன்­னாள் மத்­திய நிதி அமைச்­சர் ப.சிதம்­பரம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.