வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் விலக்கப்படும்: மோடி

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் விலக்கப்படும்: மோடி

2 mins read
76fa4f4e-6d90-42b8-ad75-0a3158df2b6b
-

குவா­ஹாட்டி: வட­கி­ழக்கு மாநி­லங்­களில் சட்­டம், ஒழுங்கு நிலைமை சீரா­ன­தும் அங்கு தற்­போது நடப்­பில் இருக்­கும் ஆயு­தப்­படை சிறப்பு அதி­கா­ரச் சட்­டம் விலக்­கிக் கொள்­ளப்­படும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

அஸ்­ஸா­மில் நடை­பெற்ற 'அமைதி, ஒற்­றுமை, வளர்ச்சி மாநாட்­டில்' அவர் கலந்­து­கொண்டு பேசி­னார்.

நாகா­லாந்து, அஸ்­ஸாம், மேகா­லயா, திரி­புரா, மணிப்­பூர் ஆகிய மாநி­லங்­களில் சட்­டம், ஒழுங்கு, பாது­காப்பு ஆகி­ய­வற்றை முன்­னிட்டு ஆயு­தப்­ப­டைச் சிறப்பு அதி­கா­ரச் சட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. எதிர்க் கட்­சி­கள் அம்­மா­நி­லங்­களில் ஆட்­சி­யில் இருந்­த­வே­ளை­யில் அது தொடர்ந்து நீட்­டிக்­கப்­பட்­டது.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக சட்­டம், ஒழுங்கு நிலைமை மேம்­பட்­ட­தால் மேகா­லயா, திரி­புரா ஆகிய மாநி­லங்­களில் அந்­தச் சட்­டம் விலக்­கிக்­கொள்­ளப் பட்­டது. மற்ற மாநி­லங்­களில் சில பகு­தி­களில் மட்­டும் சென்ற 1ஆம் தேதி­யில் இருந்து அது விலக்­கப்­பட்­டது.

தற்­போது சட்­டம் அம­லில் இருக்­கும் பகு­தி­களில் சட்­டம், ஒழுங்கு நிலைமை மேம்­பட்­ட­தன் பிறகு ஆயு­தப்­ப­டைச் சிறப்பு அதி­கா­ரச் சட்­டம் முழு­மை­யாக விலக்­கிக்­கொள்­ளப்­படும் என்று திரு மோடி தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான எல்­லைப் பிரச்­சி­னைக்கு அமைதி வழி­யில் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறிய அவர், அந்த வட்­டா­ரத்­தின் பொரு­ளி­யலை வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் மாநில அர­சு­கள் முனைந்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

வட­கி­ழக்கு மாநி­லங்­களில் புற்று­நோய் சிகிச்சை நிலை­யங்­கள் இல்லை என்­ப­தையும் மக்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதையும் சுட்­டிய அவர், திப்­ரூ­கர் எனும் இடத்­தில் புதிய சிகிச்சை நிலை­யத்­தைத் திறந்து வைத்­தார்.

மேலும் ஆறு இடங்­களில் உள்ள நிலை­யங்­களை காணொளி வாயி­லா­கத் திறந்து வைத்­த­து­டன் புதி­தாக ஏழு புற்­று­நோய் சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார். டாடா அறக்­கட்­ட­ளை­யு­டன் இணைந்து இந்­நி­லை­யங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.