ஐந்து முதல் பன்னிரண்டு வயது சிறாருக்கு கொவிட்-19 தடுப்பூசி பற்றிய அறிவிப்பு

ஐந்து முதல் பன்னிரண்டு வயது சிறாருக்கு கொவிட்-19 தடுப்பூசி பற்றிய அறிவிப்பு

1 mins read
f171cde0-a994-40c5-8064-c87bc3b0ccea
-

புது­டெல்லி: நாடெங்­கும் தற்­போது பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­பட்டு, நேரடி வகுப்­பு­கள் நடை­பெ­றும் நிலை­யில், பல இடங்­களில் குழந்­தை­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வது பெற்­றோ­ருக்கு கவலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் மாநில முதல்­வர்­க­ளு­டன் காணொளி வழி­யாக நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில், கூடிய விரை­வில் குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வ­தற்­குத் தமது அரசு முன்­னு­ரிமை தரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஐந்து முதல் பன்­னி­ரண்டு வயது வரை­யி­லா­ன­சி­று­வர்­க­ளுக்­காக 'பயா­ல­ஜிக்­கல்- இ' நிறு­வ­னத்­தின் 'கோர்­பே­வாக்ஸ்' தடுப்­பூ­சிக்­கும், 'பாரத் பயோ­டெக்' நிறு­வ­னத்­தின் 'கோவேக்­சின்' தடுப்­பூ­சிக்­கும் இந்­தி­யத் தலைமை மருந்­துக் கட்­டுப்­பாட்டு இயக்­கு­ந­ர­கம் அவ­ச­ரப் பயன்­பாட்டு அனு­ம­தியை இம்­மா­தம் 26ஆம் தேதி வழங்­கி­யது.

இவ்­வே­ளை­யில், புது­டெல்­லி­யில் நேற்று தடுப்­பூசி த் திட்­டத்­துக்­கான தேசிய தொழில் நுட்ப ஆலோ­ச­னைக் குழு கூட்­டம் நடை­பெற்­றது. இதில் ஐந்து முதல் பன்­னி­ரண்டு வயது வரை­யிலான குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வதை எப்­போது தொடங்­க­லாம் என்று முடி­வெ­டுத்து அர­சுக்கு பரிந்­து­ரைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.அதன் அடிப்­ப­டை­யில் மத்­திய அரசு அதன் அறி­விப்பை வெளி­யி­டும்.

இதற்­கி­டையே கடந்த சில நாள்­க­ளாக நாட்­டில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­து­வ­ரு­வ­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

நேற்று புதி­தாக 3,377 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அவர்­களில் 1,490 பேர் தலை­ந­கர் புது­டெல்­லி­யைச் சேர்ந்­த­வர்­கள்.