மோடி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் வேண்டும்

மோடி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் வேண்டும்

2 mins read
7a3da72e-7423-42ae-aae8-33941f8b23f2
-

25 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு

புது­டெல்லி: ஆறு ஆண்­டு­க­ளுக்கு பிறகு டெல்­லி­யில் உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­தி­கள், முதல்­வர்­கள் மாநாடு நடை­பெற்­றது. மாநாட்­டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிர­த­மர் மோடி நீதி­மன்­றங்­களில் உள்­ளூர் மொழி­களில் வழக்­கு­கள் நடத்த ஊக்­கு­விக்­க­வேண்­டும் என்று பேசி­யது அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தது.

25 உயர் நீதி­மன்­றங்­க­ளின் தலைமை நீதி­ப­தி­க­ளுக்­கான 39வது மாநாடு டெல்­லி­யில் நேற்று நடந்­தது. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் இந்த மாநாடு கொரோனா உள்­ளிட்ட கார­ணங்களால் ஆறு ஆண்டு இடைவெளிக்­குப் பிறகு நேற்று நடை­பெற்­றது.

மாநாட்­டைத் தொடங்கி வைத்­துப் பேசிய பிர­த­மர் மோடி, "மொழி என்­பது நீதியை பெறு­வ­தற்கு ஒரு வகை­யான தடை­யாக இருக்­கிறது.

"நீதி­மன்­றங்­களில் உள்­ளூர் மொழி­களை ஊக்­கு­விக்­க­வேண்­டும். இது நாட்­டின் சாதா­ரண மக்­க­ளுக்கு நீதித்­துறை மீது நம்­பிக்­கையை அதி­க­ரிக்­கும்.

"தீர்ப்­பு­கள் என்­பது சாதா­ரண மக்­களும் புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழி­களில் இருக்க வேண்­டும். புரிந்­து­கொள்ள முடி­யா­விட்­டால் அது வெறும் உத்­த­ர­வாக மட்­டுமே பார்க்­கப்­படும். அது நீதி­யாக இருக்­காது.

"நீதியை எளி­தாக வழங்கு

வதற்கு காலா­வ­தி­யான சட்­டங்­களை ரத்து செய்ய வேண்­டும் என்று முதல்­வர்­க­ளைக் கேட்­டுக் கொள்­கி­றேன்.

"2015ஆம் ஆண்­டில் பொருத்­த­மற்­ற­தாக மாறிய சுமார் 1,800

சட்­டங்­களை நாங்­கள் கண்­ட­றிந்­தோம்.

"இதில் மத்­திய அர­சின் 1,450 சட்­டங்­கள் நீக்­கப்­பட்­டன. ஆனால் 75 சட்­டங்­கள் மட்­டுமே மாநி­லங்­

க­ளினால் ரத்து செய்­யப்­பட்­டன.

"டிஜிட்­டல் இந்­தியா பணி­யின் இன்­றி­ய­மை­யாத பகு­தி­யாக நீதித்­து­றை­யில் தொழில்­நுட்­பத்தை

இந்­திய அரசு கரு­து­கிறது.

"இந்­திய சுதந்­தி­ரத்­தின் 75வது ஆண்டு விழாவை கொண்­டா­டும் வேளை­யில் நீதி எளி­தி­லும் விரை­வா­க­வும் அனை­வ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டிய வகை­யில் நீதித்­துறை அமைப்பை உரு­வாக்­கு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

"நீதித்­து­றையை மேம்­ப­டுத்த எங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் செய்து வரு­கி­றோம்.

"நீதித்­துறை உள் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­த­வும் நாங்­கள் பணி­யாற்றி வரு­கி­றோம்," என்றார்.

யோகி ஆதித்­ய­நாத், மம்தா பானர்ஜி, பச­வ­ராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்­லப் தேவ், தமிழக சட்­டத்­துறை அமைச்­சர் ரகு­ப­தி­யும் சென்னை உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி எம்.என்.பண்­டா­ரி­யும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.