கேரளாவில் ஐந்து நாள்களில் 110 உணவகங்களுக்குத் தடை

1 mins read
1c65a683-eded-4763-8e84-d4a8e0588fc7
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் உண­வுப் பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­யின்­போது கடந்த ஐந்து நாள்­களில் மட்­டும் 110 உண­வ­கங்­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் கெட்­டுப்­போன நிலை­யில் இருந்த கிலோ கணக்­கி­லான இறைச்சி பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கேர­ளா­வின் காசர்­கோடு மாவட்­டத்­தில் கடந்த வாரம் கோழி 'ஷவர்மா' சாப்­பிட்ட மாணவி ஒரு­வர் திடீ­ரென உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­ப­வம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

இதை­ய­டுத்து திரு­வ­னந்­த­பு­ரம் அருகே நெடு­மங்­காடு பகு­தி­யில் உள்ள உண­வ­கம் ஒன்­றில் பரோட்­டா­வு­டன் பாம்பு தோல் இருந்­த­தும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இத­னால் மாநி­லம் முழு­வ­தும் உள்ள உண­வ­கங்­களில் அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அத்­து­றை­யின் அமைச்­சர் வீணா ஜார்ஜ் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

உண­வ­கங்­களில் விற்­கப்­படும் உணவு வகை­கள் தர­மாக உள்­ள­னவா, உண­வ­கங்­களில் சுகா­தார நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப் படு­கின்­ற­னவா என்று அதி­கா­ரி­கள் ஆய்வு செய்து வரு­கி­றார்­கள்.

தர­மற்ற உண­வுப் பொருள்­கள் இருப்­ப­தும் சுகா­தா­ரச் சீர்­கேடு நில­வு­வ­தும் தெரி­ய­வ­ரும் பட்­சத்­தில் சம்­பந்­தப்­பட்ட உண­வ­கங்­கள் உட­ன­டி­யாக மூடப்­ப­டு­கின்­றன.

கடந்த ஐந்து நாள்­களில் மட்­டும் 110 உண­வ­கங்­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் 347 உண­வ­கங்­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு விளக்­கம் கேட்டு நோட்­டீசு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.