தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமாச்சல சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடி; விசாரணை

2 mins read
9f144a0e-bd71-4ba5-971d-110f2cefc620
-

தர்­ம­சாலா: இமாச்­ச­லப் பிர­தேச மாநில சட்­ட­மன்ற நுழை­வா­யி­லில் 'காலிஸ்­தான்' பிரி­வி­னை­வாத அமைப்­பின் கொடி கட்­டப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி­யுள்­ளது.

சீக்­கி­யர்­க­ளுக்­குத் தனி நாடு வேண்­டும் என்ற கோரிக்­கை­யு­டன் 1980களில் தொடங்­கப்­பட்­டதே இந்த 'காலிஸ்­தான்' அமைப்பு. 1980களில் பஞ்­சாப் மாநி­லத்­தில் காலிஸ்­தான் போரா­ளி­கள் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­ட­னர். இப்­போது அது பயங்­க­ர­வாத அமைப்­பாக அறி­யப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், அடை­யா­ளம் தெரி­யாத சிலர் தர்­ம­சா­லா­வில் உள்ள இமாச்­சல சட்­ட­மன்ற நுழை­வா­யி­லில் 'காலிஸ்­தான்' கொடி­க­ளைக் கட்டி வைத்­தும் சுற்­றுச்­சு­வ­ரில் 'காலிஸ்­தான்' என்று பஞ்­சாபி மொழி­யில் எழு­தி­விட்­டும் சென்­றனர்.

இத­னைக் கோழைத்­த­ன­மான செயல் எனக் குறிப்­பிட்டு, கண்­டனம் தெரி­வித்­தார் மாநில முதல்­வர் ஜெய்­ராம் தாக்­குர்.

குளிர்­கா­லக் கூட்­டத்­தொ­டர் மட்­டுமே அந்­தச் சட்­ட­மன்­றத்­தில் நடை­பெ­று­வது வழக்­கம். ஆகை­யால், பெரும்­பா­லும் அச்­ச­ம­யத்­தில் அங்கு கூடு­தல் பாது­காப்பு ஏற்­பாடு­கள் தேவை என்று பாஜ­க­வைச் சேர்ந்த முதல்­வர் தாக்­குர் கூறி­ இ­ருக்­கி­றார்.

சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­து­றை­யில் புகார் பதி­வு­செய்­யப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வி­யில் பதி­வான காணொளி ஆரா­யப்­பட்டு வரு­கிறது. தவ­றி­ழைத்­தோர்­மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மாநில எல்­லைப் பகு­தி­களில் பாது­காப்பு மறு­ஆய்வு செய்­யப்­படும்," என்­றும் திரு தாக்­குர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், பின்­னி­ர­வில் அல்­லது அதி­கா­லை­யில் காலிஸ்­தான் கொடி­யைக் கட்­டி­விட்­டுச் சென்று இ­ருக்­க­லாம் என்று காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர் குஷல் சர்மா தெரி­வித்­தார்.

"நுழை­வா­யி­லில் கட்­டப்­பட்ட காலிஸ்­தான் கொடி­களை அகற்றி­விட்­டோம். இது பஞ்­சாப் மாநி­லத்­தில் இருந்து வந்த சுற்­றுப்­ப­ய­ணி­கள் சில­ரது வேலை­யா­க­வும் இருக்­க­லாம்," என்று அவர் கூறி­னார்.

இத­னி­டையே, இச்­சம்­ப­வத்­திற்­காக ஆம் ஆத்மி கட்சி, பாஜ­க­வைக் கடு­மை­யா­கச் சாடி­யுள்­ளது.

"ஒட்­டு­மொத்த பாஜ­க­வும் தஜிந்­தர் சிங் பக்கா எனும் ஒரு குண்­ட­ரைக் காப்­பாற்ற முயல்­கிறது. சட்­ட­மன்­றத்­தைக்­கூட பாது­காக்க முடி­யாத அர­சால் எவ்­வாறு மக்­க­ளைக் காக்க இய­லும்? இது இமாச்­ச­லப் பிர­தே­சத்­தின் மாண்பு தொடர்­பான விஷ­யம்; நாட்­டின் பாது­காப்பு தொடர்­பான விஷ­யம். பாஜக அர­சாங்­கம் முற்­றி­லும் தோற்­று­விட்­டது," என்று ஆம் ஆத்மி கட்சி அமைச்­சர் மணீஷ் சிசோ­டியா சாடி­யுள்­ளார்.