பெங்களுர்: திருமணமான பெண்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்படுவது கர்நாடகாவில்தான் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பது பற்றி தேசிய குடும்ப நலத்துறை நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்து உள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு எதிராக 48 விழுக்காட்டினர் கருத்து பதிவிட்டு உள்ளனர். 2ஆம் இடத்தில் உள்ள பீகார் மாநிலத்திற்கு எதிராக 43 விழுக்காட்டினர் கருத்துரைத்துள்ளனர்.
எந்தெந்த வகைகளில் பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
மனதளவிலும் உடல் அளவிலும் பாலியல் ரீதியாகவும் அதிக தொல்லைகள், கொடுமைகள் இழைப்பது கணவர்கள்தான்.
இதில் கணவன்மார்கள் தங்களது மனைவிகளை கண் பகுதியில் தாக்கு வதும் கை-கால்களை முறிப்பதும் கொடூரமாக தாக்குவதும் அதிகரித்து இருக்கிறது. குடும்ப சண்டையைக் காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவ தும் அதிகரித்துள்ளது.

