தங்கம் அறுவடையில் சிங்கப்பூர்

தங்கம் அறுவடையில் சிங்கப்பூர்

2 mins read
b3929de6-3eeb-4cc2-b40e-fb8de59735d5
-

ஹனோய்:: வியட்­னா­மில் நடை­பெற்று வரும் 31வது தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் நேற்று சிங்­கப்­பூர் வீரர்­கள் அடுத்­த­டுத்து தங்­கப் பதக்க அறு­வடை செய்­த­னர்.

நேற்று மாலை வரை வாள்­வீச்­சுப் போட்­டி­யி­லும் ஆண்­கள் மற்­றும் பெண்­கள் நீச்­சல் போட்­டி­க­ளி­லும் சிங்­கப்­பூ­ருக்­குத் தங்­கம் கிடைத்­தது.

வாள்­வீச்சு ஆண்­கள் தனிப்­பி­ரி­வில் வர­லாற்று வெற்­றி­யைப் பதிவு செய்­த­வர் சிங்­கப்­பூர் தேசிய வாள்­வீச்சு வீரர் ஜோன­தன் ஆவ் இயோங் (படம்).

ஹனோய் நக­ரின் மை டின் உள்­வி­ளை­யாட்டு அரங்­கில் நேற்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் பிலிப்­பீன்­ஸின் நேத­னி­யல் பெரேஸை 15-8 என்ற புள்­ளிக் கணக்­கில் ஜோன­தன் தோற்­க­டித்­தார்.

முன்­ன­தாக, இந்த 21 வயது சிங்­கப்­பூ­ரர் அரை இறு­தி­யில் ஹான்ஸ் யூங் என்­னும் மலே­சிய வீரரை 15-11 என்ற புள்­ளிக் கணக்­கில் வென்­றார். 2019ஆம் ஆண்டு வெள்­ளிப் பதக்­கம் வென்­ற­வர் ஹான்ஸ் யூங்.

வாள்­வீச்­சில் சிங்­கப்­பூர் இப்­போ­து­தான் முதல் தங்­கத்தை வென்­றுள்­ளது. இதற்கு முன்­னர் வெள்­ளிப் பதக்­கம் வரை சிங்­கப்­பூர் வீரர்­கள் வென்­றுள்­ள­னர்.

"இந்த வெற்றி ஒரு கற்­ப­னையோ என்று எண்ணி வியக்­கி­றேன். அதிக எதிர்­பார்ப்­பு­கள் இன்றி போட்­டி­யில் பங்­கேற்று என்­னால் இயன்­ற­வரை சிறப்­பாக ஆடி­னேன். ஆட்­டத்­தின் முடிவை எண்ணி மகிழ்­கி­றேன்," என்­றார் ஆவ் இயோங்.

முதன்­மு­றை­யாக தென்­கி­ழக்­கா­சி­யப் போட்­டி­யில் பங்­கேற்­றது முற்­றி­லும் ஒரு புதிய அனு­ப­வம் என்று கூறிய இவர், சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து இதற்கு முன்­னர் பெரிய போட்­டி­களில் பங்­கேற்­ற­தில்லை என்­றார்.

இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்­ற­தும் வெற்­றி­பெற்­ற­தும் தமது நினை­யில் நீண்­ட­கா­லத்­துக்­குப் நிலைத்­தி­ருக்­கும் என்று தெரி­வித்­தார் ஆவ் இயோங்.

முன்னதாக, நேற்றுக் காலை நடைபெற்ற பெண்கள் பிரிவில் சிங்கப்பூரின் ஜெசிகா ஓங் வெள்ளிப் பதக்கம் வென்றார். வியட்னாமின் புயி தி து ஹா என்பவரிடம் 11-15 என்ற புள்ளிக்கணக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.