லும்பினி: புத்தரின் பிறந்தநாள் விழாவான புத்த பூர்ணிமா விழா நேப்பாள நாட்டின் லும்பினியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை ஒட்டி, புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் நேப்பாளத்தில் உள்ள லும்பினிக்கு பிரதமர் நரேந்திர மோடி ேநற்று தனி விமானத்தில் பயணம் மேற் கொண்டார்.
"புத்த ஜெயந்தியின் புனிதமான தருணத்தில், மாயாதேவி கோயிலில் பிரார்த்தனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். புத்தர் பிறந்த புனிதத் தலத்தில் மரியாதை செலுத்துவதற்காக மில்லியன்கணக்கான இந்தியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நான் பெருமைப்படு கிறேன்," என்று பிரதமர் மோடி நேப்பாளம் புறப்படுவதற்கு முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
லும்பினியில் கட்டப்பட உள்ள புத்த கலாசாரம், பாரம்பரிய மைய கட்டுமானத் தளத்துக்கு அடிக்கல் நாட்டியவர், அங்குள்ள மாயாதேவி கோயிலிலும் வழிபாடு செய்தார்.
"கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனிதத் தலமான மாயாதேவி கோயிலில் நேப்பாள நாட்டுப் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவுடன் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்," என்று நேப்பாள வெளியுறவு அமைச்சு டுவிட்டரில் தெரிவித்து இருந்தது.
தனது பயணம் குறித்து மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "புத்த பூர்ணிமா நன்னாளில் நேப்பாள மக்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. லும்பினியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஆவலுடன் காண காத்திருக்கிறோம்," எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி நேப்பாளத்துக்குச் செல்வது இது ஐந்தாவது முறையாகும்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

