தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுல் காந்தி: குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே பதவி

2 mins read
26341555-e6d7-444f-bb35-9262cbfb48d7
-

உதய்­பூர்: மக்­க­ளு­டன் மீண்­டும் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யில் அக்­டோ­பர் மாதம் முதல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சார்­பில் பாத யாத்­திரை மேற்­கொள்ள உள்ள தாக அக்­கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி அறி­வித்­துள்­ளார்.

"ஒரு குடும்­பத்­துக்கு ஒரு பதவி என்ற விஷ­யத்­தைக் கொண்­டு­வர விரும்­பு­கி­றேன். ஒரு நப­ருக்கு ஒரு பதவி, குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்குத்­தான் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு என்ற விதி­மு­றை­கள் காங்­கி­ர­சில் ஏற்­றுக்­கொள்­ளப்பட்­டுள்­ளன," என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

ராஜஸ்­தான் மாநி­லம், உதய்­பூ­ரில் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் நடை ெபற்ற சிந்­தனை அமர்வு மாநாடு, நேற்று முன்­தி­னம் நிறை­வ­டைந்­தது.

2024ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­காக மூன்று நாள்­கள் நடை­பெற்ற இந்த மாநாட்­டில் காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி நிறை­வுரை ஆற்­றி­னார்.

அப்­போது பேசிய அவர், "குடும் பத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே பதவி, குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே போட்­டி­யிட அனு­மதி வழங்­கு­வது என காங்­கி­ரஸ் காரி­யக் கமிட்­டி­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. கட்­சி­யில் ஒரு­வர் ஒரு பொறுப்­பில் 5 ஆண்­டு­க­ளுக்கு மேல் நீடிக்­கக் கூடாது என முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது," என்­றார்.

சாதா­ரண மக்­க­ளு­ட­னான தொடர்பை காங்­கி­ரஸ் கட்சி இழந்து விட்­ட­தாக ஆதங்­கம் ெதரி­வித்­துள்ள ராகுல் காந்தி, மக்­க­ளு­ட­னான உறவை வலுப்­ப­டுத்த நாடு முழுவதும் யாத்­திரை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் கூறி­னார்.

கன்­னி­யா­கு­மரி முதல் காஷ்­மீர் வரை காங்­கி­ரஸ் சார்­பில் மாபெ­ரும் பாத­யாத்­திரை நடை­பெ­றும் என காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி தெரி­வித்­துள்­ளார்.

இது மகாத்மா காந்தி பிறந்­த­நா­ளான அக்­டோ­பர் 2ஆம் தேதி தொடங்க உள்­ள­தா­கக் கூறி­ய­வர், கட்­சி­யில் உள்ள இளை­ஞர்­கள் உள்­பட அனை­வ­ரும் யாத்­தி­ரை­யில் பங்­கேற்­க­வேண்­டும் என்­றும் வேண்­டு­கோள் விடுத்­தார்.

"என்­னைப் போன்ற வய­தான வர்­களும் மூச்சு வாங்­கா­மல் யாத்­தி­ரை­யில் பங்­கேற்­கும் வழி வகை­களை காங்­கி­ரஸ் தலை­வர்­கள் கண்­டு­பி­டிக்­க­வேண்­டும்," என­வும் சோனியா நகைச்­சு­வை­யு­டன் கூறி­யது கூட்­டத்­தில் சிரிப்­ப­லையை ஏற்­ப­டுத்­தி­யது.