கோதுமை ஏற்றுமதித் தடையைச் சற்றே தளர்த்திய இந்தியா

சுங்கத் துறையில் நாட்டைவிட்டு அனுமதிக்காகக் காத்திருக்கும் கோதுமை ஏற்றுமதி பொருட்களை இந்தியா அனுமதிக்கும் என அதன் அரசாங்கம் தெரிவித்தது. இந்தியாவிலிருந்து கோதுமை வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதை அந்நாடு தடை செய்ததன் பிறகு கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அறிவித்துள்ளது. அத்துடன், எகிப்திற்கு கோதுமை ஏற்றுமதிகளை இந்தியா அனுமதிக்கும் என்று இந்திய அரசாங்கத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

பண வீக்கம், உணவு தட்டுப்பாடு குறித்த அக்கறைகளின் காரணமாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா நேற்று முன்தினம் திடீரென தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து குஜராத்தின் கன்ட்லா துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான டன் கோதுமை பொருட்கள் அங்கேயே சிக்கின.

அரசாங்க அனுமதி இன்றி வர்த்தகர்கள் புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களில் இறங்க முடியாது என்றும் உலகிலேயே கோதுமைக்கான இரண்டாம் ஆகப் பெரிய ஏற்றுமதியாளரான இந்தியா தெரிவித்தது. பஞ்சாப், ஹர்யானா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் கோதுமை ஆக அதிக அளவில் விளைகிறது.

இந்தியா தனது தடையை நிவர்த்தி செய்யும் என்று விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தியாவின் இந்நடவடிக்கையால் உலக உணவுத் தட்டுப்பாடுகள் மோசமடையலாம் என்று அமெரிக்கா கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!