புதுடெல்லி: ஏடிஎஃப் எனப்படும் விமான எரிபொருளின் விலை திங்கள்கிழமை உச்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக விமானப் பயணக் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமான எரிபொருளின் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மே மாதத்தில் ேநற்று முன்தினம் விலை மாற்றப்பட்டது.
அதன்படி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.6,188 அதிகரிக்கப்பட்டு ரூ.1,23,039 ஆனது. அதாவது, ஒரு லிட்டரின் விலை 123 ரூபாய். இந்த விலை ஏற்றம் 5.29 விழுக்காடு ஆகும்.
இந்த உயர்வு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 10வது முறையாக விமான எரிபொருள் விலை அதிகரித்து உள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் இதுவரை 55 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. அதாவது கிலோ லிட்டருக்கு ரூ.49,017 கூடியுள்ளது.
விமானங்களுக்கான செலவினத்தில் 40 விழுக்காடு எரிபொருளுக்குரியது. எரிபொருள் விலை ஏற்றத்தால் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் அனைத்துலகப் பயணக் கட்டணங்கள் உயரலாம் என ெபாருளியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால் வெளிநாட்டுப் பயணங் களை மேற்கொள்ள விரும்பும் சுற்றுப் பயணிகளுக்கு இச்செய்தி கவலை அளிக்கும் என்கின்றனர் அவர்கள். உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக அனைத்துலக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் விமான எரிபொருள் விலையிலும் பிரதிபலிக்கிறது.

